யாழ். பிரதேசத்தில் இடம்பெறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இராணுத்தினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுடன் இணைந்தே இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஈடுபடுகின்றனர்.
வட மாகாண சுகாதார திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழிலுள்ள 511, 512 மற்றும் 513 ஆவது படைப்பிரிவின் கீழுள்ள இராணுவத்தினரும் குருநகர், சுழிபுரம், காரைநகர், கொக்குவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள பொதுமக்களும் இணைந்தே டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.