இலங்கை கடற்படை தளபதிக்கு இந்திய கடற்படையின் வீர விருது

இலங்கை கடற்படை தலைமைத் தளபதி ஜெயந்த பெரேராவுக்கு இந்திய கடற்படையின் வீர விருது, நேற்று திங்கட்கிழமை (27) வழங்கப்பட்டது. டெல்லியின் சவுத் புளொக்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. (more…)

ஜனாதிபதி தேர்தலில் புலிச் சொத்து – ஐ.தே.க.

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றம் நீக்கியதையடுத்து குமரன் பத்மநாதனூடாக (கே.பி.) தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்தக்கூடுமென பிரதம எதிர்கட்சியான ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. (more…)
Ad Widget

ஹைலன்ட் பால்மா, யோகட் விலைகள் குறைப்பு

ஹைலன்ட் பால்மா மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்தார். (more…)

கரட்டுகளுடன் அவைக்கு வந்த எம்.பி

2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இரண்டு கரட்டுகளுடன் நேற்று திங்கட்கிழமை அவைக்கு வருகைதந்திருந்தார். (more…)

35 விடயங்களை த.தே.கூ. அமுல்படுத்தியிருக்கலாம் – தவராசா

வடமாகாணசபையின் முதலாவது கூட்டம் நடைபெற்று, இம்மாதம் 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்தது. வடமாகாண சபை தேர்தலின் போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இந்த ஒருவருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படவில்லை (more…)

‘அரசாங்கத்தை வீழ்த்துவதே பொது வேட்பாளரின் நோக்கம்’ – மனோ

பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் கூறியுள்ளார். (more…)

இலங்கையில் பிறந்த வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் வடக்குக்கு தடையின்றி செல்லலாம்

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டில் இலங்கையில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

யாழில் மரக்கறி விதைகளுக்கு தட்டுப்பாடு

யாழ் மாவட்டத்தில் மரக்கறி விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் ரி.ரவிமயூரன் இன்று திங்கட்கிழமை (27) தெரிவித்தார். (more…)

காணாமற்போனவர் சடலமாக மீட்பு

கடந்த 24ஆம் திகதி முதல் காணாமற்போன கரவெட்டி குருக்கள் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயார் ஒருவர் இன்று திங்கட்கிழமை (27) காலை கரவெட்டியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாழைக்குலை திருட்டுக்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம், நீர்வேலி, சிறுப்பிட்டி பகுதிகளிலுள்ள வாழைத்தோட்டங்களில் வாழைக்குலை திருட்டுக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்பு பொறுப்பதிகாரி அநுர பாலித திங்கட்கிழமை (27) தெரிவித்தார். (more…)

பொற்பதி வீதி புனரமைப்புக்கு ரூ.11 மில்லியன் ஒதுக்கீடு

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை - பொற்பதி வீதியை புனரமைப்பதற்கு 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனரமைப்பு பணிகள் 2015 ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பமாகும் எனவும் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார். (more…)

முதியோருக்கு கண்வில்லைகள் வழங்கல்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கண்வில்லைகளை இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டு வருவதாக வடமாகாண சமூக சேவை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஜனாதிபதி-சர்மா சந்தித்துப்பேச்சு

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (more…)

13ம் திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

சுயநிர்ணயக் கோரிக்கை தலைதூக்காது இருக்க வேண்டும் என்றால் 13ம் திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். (more…)

யாழ் இயக்குனரைக் கடத்தி மிரட்டிய மூவர் தமிழகத்தில் கைது

தமிழகத்தின் வளசரவாக்கத்தில் இலங்கை வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். (more…)

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி குறையும்

இம்முறை நடைபெற்று, பெறுபேறும் வெட்டுப்புள்ளியும் வெளியாகியிருந்த ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

சுயதொழில் பயனாளிகளின் தெரிவு இடம்பெறுகின்றது

யுனிசெவ் நிறுவன நிதி மூலமான சுயதொழில் கொடுப்பனவு வழங்குவதற்காக வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் பயனாளிகள் தெரிவு ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாகவும் முன்னெடுக்கப்படுவதாக சமூக சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பிள்ளைகளுடன் பிச்சையெடுத்தால் கைது

சிறு பிள்ளைகளைக் காண்பித்து பிச்சையெடுக்கும் யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று நாடு முழுவதும் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் அறிவித்தனர். (more…)

இராணுவ ரக்வண்டி மோதி ஒருவர் யாழ் வைத்தியசாலையில்

இராணுவ ரக் வண்டியினால் மோதுண்டு படுகாயமுற்ற நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணியளவில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இராணுவத்தினரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாணத்தில்

ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் மதர் சிறி லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கினதும் தெற்கினதும் பாசம் ஒன்றிணைகின்றது என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts