Ad Widget

அநாதரவான சிறுவர்களை பொறுப்பெடுக்கும் வடக்கு மாகாணசபை

பதுளையில் நடந்த மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து நிராதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை வடக்கு அரசு பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிடப்பட்டது.

north-provincial-vadakku-npc

நேற்று வடக்கு மாகாணசபையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில்,

மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்
என்று குறிப்பிட்டார்.

நிலச்சரிவு இடரால் 75சிறுவர்கள் வரையில் தாய்,தந்தையை இழந்து தவிக்கின்றனர்.அவர்களைப் பொறுப்பேற்பதற்காகக் கொழும்பு அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது.

குறித்த 75பேரும் தமிழ்ச் சிறுவர்கள் அவர்களை கொழும்பு அரசு பொறுப்பேற்பதன் மூலம்,எதிர்காலத்தில் மொழி ரீதியாக கலாசார ரீதியாக அவர்களை மாற்றக் கூடும் எனவே குறித்த சிறுவர்களை வடக்கு மாகாண சபை பொறுப்பேற்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியின் விடுதியில் அந்த மாணவர்களைத் தங்க வைத்துப் படிப்பிப்பது தொடர்பில்
கலந்துரையாடினேன். இவ்வாறு ஒவ்வொரு பாடசாலைகளிலும் அவர்களை தங்க வைத்துப் படிப்பிப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியும்.என்று வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts