- Wednesday
- August 13th, 2025

வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சபை ஒன்றுகூடலின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பில் முடிவுற்றது. இதில் இரு தரப்பு உறுப்பினர்களும் காயம் அடைந்து இரத்த காயத்துடன் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். இச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களின் பின் இடம்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முக்கிய இரு...

டெங்கு நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட 23 வட்டாரங்களில் திண்மக்கழிவுகள் அகற்றும் பணிகள், வியாழக்கிழமை(01) முதல் முன்னெடுக்கப்பட்டு இந்த மாதம் முழுவதும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வழமையைவிட மேலதிகமாக...

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு சுற்றாடல் பிரச்சனைகள் காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட சுகாதாரப் பிரச்சனைகள் காணப்படுகின்றன. முறையாக திட்டமிடப்படாத திண்மக்கழிவு அகற்றல் நடைமுறைகள் மாவட்டத்தில் இருப்பதுடன், சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களின்றி பல்வேறு தொழிற்சாலைகள், தொழில்...

மதுவுக்கு எதிரான பாரிய பிரசாரத்தை 'ஹெல்தி லங்கா' அமைப்பு யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுத்து வருகின்றது. மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் கடந்த வாரம் சண்டிலிப்பாய், சங்கானை, காரைநகர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார நடவடிக்கைகளில் மதுவால் ஏற்படும் பாதிப்புக்கள், மதுவால் ஏற்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகள்...

வடமாகாணத்துக்கு வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இதுதொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருப்பதாகவும் இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி வியாழக்கிழமை (01) தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தால் வடமாகாணத்தில் கடந்த வருடம் (2013) மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், உதவிகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து தியாகராசா, யாழ் பருத்தித்துறை பிரதேச...

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சூழவுள்ள வீதிகளினூடாக அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர ஏனையவை செல்ல அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ். மாவட்ட வாக்குகளை எண்ணும் நிலையமாக இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 8,9 ஆம்...

'எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கு சொந்தம். அந்தவகையில் ஏற்கனவே பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த கணிசமான காணிகளை கமச்செய்கைக்காக பெற்றுக்கொடுத்துள்ளேன். எனவே மீதமிருக்கும் எமது மக்களின் நிலங்களையும் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பேன். அதற்கு நானே பொறுப்பு' என பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சாவகச்சேரி தென்மராட்சி...

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த அரசுடன் சேர்ந்திருந்து செயற்படும் போது தமிழ்மக்களுக்காக ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை என்பதை நாம் மறக்கவில்லை. ஆனால், மஹிந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டியுள்ளதால், நாங்கள் மைத்திரிக்கு ஆதரவளிக்கிறோம் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன் இன்று வியாழக்கிழமை (01) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால...

க.பொ.த உயர்தரப் பரீட்சை சிறந்த பெறபேறுகளைப் பெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதன்கிழமை (31) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. தேசிய ரீதியில், மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த வடமாகாணத்தை சேர்ந்த 23 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பணப்பரிசும் வழங்கப்பட்டது. கணிதப்பிரிவில் தேசிய...

யாழ்.நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட முறுகலே குழுச்சண்டையாக மாறியுள்ளது. சந்தியின் அருகிலுள்ள கடைகளின் வெளியில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப் போத்தல்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்ததால், 5 பேர் காயமடைந்து அவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை...

விளைவுகளை பற்றி சிந்திக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் தலையிடாமல் தமிழ் மக்களை சுயவிருப்பத்துக்கமைய வாக்களிக்க அனுமதிக்குமாறு நான் விடுத்த வேண்டுகோளுக்கு முரணாக, ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமை துரதிஸ்டமானதாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் ஆனந்தசங்கரியால் புதன்கிழமை...

மத்திய அரசானது மாகாணத்தை மடக்கி ஆள முடியும் என்பதை உணர்த்துவதாக எமது 14 மாத அனுபவங்கள் அமைந்துள்ளன. வடமாகாண மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு கட்சியின் தலைவர் மத்தியின் மதிப்பு தன்பால் இருப்பதால் தொடர்பில்லாதவரைக் கூட்டத்திற்குக் கொண்டு வந்து ஒவ்வாத நடவடிக்கைகள் இடம்பெற இடமளித்தார். இவை யாவும் “கருடா சௌக்கியமா?” என்ற கலாசாரத்தையே முன்னிறுத்துகின்றது. இதுதான்...

இரண்டாயிரம் இராணுவத்தினரைப் பயன்படுத்தி வடக்கு மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன. கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட...

யுத்தம், ஆயுதம்தான் நல்ல வியாபாரம். அந்த வியாபாரத்தை நாம் நிறுத்திவிட்டோம். 30 வருட யுத்த்ததை 4 வருடங்களில் முடித்து மரண பயத்தை இல்லாதொழித்தோம். நாட்டை ஒன்றிணைத்தோம். சம்பந்தனுக்கும், ரவூப் ஹக்கீமும் கேட்பதைக் கொடுக்க முடியுமா? மக்களாகிய நீங்களே தீர்மானியுங்கள். - இவ்வாறு தெரிவித்தார் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ என்றதும்...

தற்போதைய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்காக தேர்தல் விதிமீறல் புகார்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை தேர்தல் வன்முறைகள் காரணமாக காயமடைந்த 46 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார் அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி....

பிறக்கின்ற புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வு மேலும் சிறக்கின்ற புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், அதற்காக கனிந்திருக்கும் சூழலை சரியான திசை வழி நோக்கி நகர்த்தி செல்ல எமது மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிறந்துவரும் ஒவ்வொரு புத்தாண்டினையும்,...

புத்தாண்டு பிறந்து ஒரு சில மணித்தியாலத்திலேயே வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கலைநகர் அளவெட்டி என்னும் இடத்தில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கானார்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.சுரேஸ்குமார் (வயது 25) என்பவரே இவ்வாறு காயமடைந்தவராவார். தையல் கடையில் பணிபுரியும்...

எதிர்கால தலைமுறையை கருத்திற்கொண்டு புத்திசாதூரியமான தீர்மானங்களை புத்தாண்டில் மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தாய் நாடு எதிர்நோக்கியுள்ள மிகப் பாரதூரமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக பொது மக்கள், புத்தாண்டில் மதிநுட்பமான தீர்மானத்தினை மேற்கொள்ளவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நாம் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். போர்...

யாழில் இடம்பெறும் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கும் சமுர்த்திப் பயனாளிகளுக்கே 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் உச்சம் அடைந்துள்ளன. இந்த நிலையில் பரப்புரைக் கூட்டத்தினை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளைய தினம் வருகைதரவுள்ளார். எனவே மகிந்த பங்கேற்கும்...

All posts loaded
No more posts