Ad Widget

பிரதம நீதியரசராக ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானம்!

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக க.ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

rajitha sena

இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை – இன்று நள்ளிரவுடன் ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க தாம் ஓய்வுபெற்ற பின்னர் ஏற்படும் பிரதம நீதியரசர் வெற்றிடத்துக்கு கே.ஸ்ரீபவனை நியமிப்பதற்கு தான் விரும்புகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்விலேயெ அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Posts