அரசாங்க பாடசாலைகளுக்கு இன்று முதல் 9வரை விடுமுறை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று (07) முதல் எதிர்வரும் 09 ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பின்னர் 12ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்தது. இதேவேளை புனித பாப்பரசரின் வருகையையொட்டி பாதுகாப்பு கடமை களுக்காக கொழும்பு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதி கருதி தெரிவு...

யாழில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள்

யாழில் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஆண்ட இனம் மீண்டும் ஆள மகிந்த ஜனாதிபதி ஆக வேண்டும், எமது உறவுகள் மீண்டும் புனர்வாழ்வு முகாம் செல்வதை தடுத்திடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Ad Widget

ஒரு தொகுதி ஆவணங்கள் சிக்கின?

தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக பொது எதிரணியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்திலிலுள்ள நான்கு அறைகள் பூட்டிய நிலையில் காணப்படுவதால் அதனை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள்

ஜனாதிபதித் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 9 மணிமுதல் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர்...

மக்கள் பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுதி செய்யுங்கள்!

மக்கள் அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுதிப்படுத்துமாறும், அரச ஊடகங்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு சார்பாக செயற்படுவதை நிறுத்துமாறும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரசார நடவடிக்கைகளின்போது பல வன்முறைச் சம்பவங்களும், மிரட்டல்களும் இடம்பெற்றன என இலங்கையை சேர்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன. வாக்காளர்கள், வேட்பாளர்கள்,...

ரயில் வந்தபோதும் மூடப்படாத புகையிரத கடவை

ரயில் வந்த போதும் புகையிரதக் கடவை மூடப்பட்டாது இருந்த சம்பவம் யாழ். மீசாலை ஜயா கடையடி புகையிரதக் கடவையில் செவ்வாய்க்கிழமை (06) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு வீதியிலிருந்து ஏ – 9 வீதிக்கு நுழையும் மேற்படி புகையிரதக் கடவை ரயில் வந்த போதும், மூடப்படாமல் இருந்தது. பொதுமக்கள் பயணம் செய்துகொண்டிருக்கையில் சற்று தூரத்தில் ரயில் வந்துகொண்டிருந்ததையடுத்து...

அனந்தி வீட்டின் மீது கல்வீச்சு: சி.வி.கே கண்டனம்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதியொருவரின் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தேர்தல் வன்முறைச் சம்பவமாகும். இது தொடர்பில்...

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் திட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனத் தன்மையினை பாதுகாக்க கோரி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாட்டினை செய்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பினை செய்து வருவதுடன் தேர்தல் பிரசாரத்திகதி முடிவடைந்தும் ஜனாதிபதி தனது பிரசாரங்களை அரச ஊடகங்களூடாக பிரசுரிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாளை...

தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பில் இராணுவத்தையும் அழைக்கும் சாத்தியம்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 71,100 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக பாதுகாப்பு பணிகள் தொடர்பில் இராணுவத்தினரின் பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இதன் பொருட்டு இராணுவப் படையணி தயார் நிலையில் உள்ளதுடன் இராணுவ படையணியை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைக்கு பொலிஸாரே முற்று முழுதான...

வெளிநாட்டவர்களின் கண்காணிப்பில் வடக்கு

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த கண்காணிப்பாளர்களில் ஒரு தொகுதியினர் நேற்று (06) வடக்கிற்கு விஜயம் செய்து பணிகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பில் இந்த சந்திப்பின்...

கடந்தகால வரலாற்றை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களியுங்கள் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

தமிழ் மக்கள் அனைவரும் கடந்த கால வரலாறுகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தநிலையிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளது. ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின்...

யாழ். இந்திய துணைத்தூதரகத்திற்கு புதிய தூதுவர்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு புதிய தூதுவராக ஏ.நடராஜன் பதவியேற்றுள்ளார். யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவராக கடமையாற்றிய வி. மகாலிங்கம் மாற்றலாகிச் சென்றுள்ளார். அந்தநிலையில் கண்டியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு தூதுவராக கடமையாற்றிய ஏ.நடராஜ் தனது கடமைகளை நேற்று முதல் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னாள் தூதுவர் வி.மகாலிங்கம் மாற்றாகிச் சென்றதையடுத்து பதில் தூதுவராக இதுவரை காலமும் தட்சணாமூர்த்தி...

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் தகுந்த ஆவணங்களுடன் சென்று வாக்களிக்க முடியும் என யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சகருமான சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (6) தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஜனாதிபதித் தேர்தலுக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதியில் இருந்து வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக டிசெம்பர் 3ஆம் திகதி வரை...

சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக முறைப்பாடு – கபே

தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரக்கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் வராவிட்டால் எதிர்காலத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது எனக்கூறி அழைத்தமை தொடர்பில்...

ஆளுங்கட்சிக்கு தாவவில்லை – த.தே.கூ உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் இருவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தாவியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், தாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகிய இருவரும் விளக்கமளித்தனர். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எங்கும் செல்லமாட்டோம் எனக் கூறிய ஜெ.ஜெயராஜா,...

ஐஸ் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

யாழ்.கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதில் ஐஸ் தொழிற்சாலை நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக கூறி நேற்று திங்கட்கிழமை (05) மாலையிலிருந்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் 80 ஊழியர்கள் பணியாற்றவேண்டிய நிலையில் 12 ஊழியர்கள் மட்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தங்களுக்கு...

போலி வாக்குச்சீட்டுக்களை நாங்கள் விநியோகிக்கவில்லை – அங்கஜன்

மைத்திரிபால சிறிசேன முச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார் என விநியோகிக்கப்பட்ட போலி வாக்குச்சீட்டுக்களை தங்களுடைய நீலப்படையணி விநியோகிக்கவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் செவ்வாய்க்கிழமை (06) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார் எனக்குறிப்பிட்டு, போலி வாக்குச்சீட்டுக்கள் திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

அனந்தியின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டுகோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். பண்ணாகத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 1.30 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வெளியில் வந்து பார்த்த போது உயரமான கோர்ட் அணிந்த ஒருவர் வீட்டுக்கு அருகிலிருந்து...

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதோர் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள வசதி

வீட்டிலில்லாமை மற்றும் வேறு ஏதேனும் காரணத்தினால் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் எஞ்சியுள்ள நாட்களில் தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான தபால் நிலையங்களுக்கு நேரில் சென்று அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் ரோஹண அபயரட்ன தெரிவித்தார். வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்ட தினத் தன்று அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலில்லாமை அல்லது தபாலில் ஏற்பட்டிருந்த ஏதேனும்...

போலிப் பிரசாரங்களை நம்பாதீர்கள்! அன்னச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்!!

"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8 ஆம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Loading posts...

All posts loaded

No more posts