எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் பெண் உயிரிழப்பு

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிகண்டி, கொற்றாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அன்பழகன் அமுதா (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த பெண், எரிகாயங்களுடன் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்....

சிறைக் கைதி மரணம்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியொருவர், திங்கட்கிழமை (09) இரவு, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, பாரதிபுரம், 145ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான தேவதாஸ் குணசீலன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர்,...
Ad Widget

மாத்திரை சிக்கியதில் பாலகன் பலி

தொண்டையில் மாத்திரையொன்று சிக்கியதில் 3 வயது சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றது. சம்பவத்தில், கி.அருண் என்கின்ற சிறுவனே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அச்சிறுவனுக்கு, அவனது தாயார் மாத்திரையொன்றைக் கொடுத்த போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சிறுவனை அவனது பெற்றோர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு அழைத்துச்...

இலங்கை அரசின் சொற்கள் செயல்களாக மாறவேண்டும் – டேவிட் கேமரன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞைகளை வரவேற்பதாக தெரிவித்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் அனைத்தும் வாய்வார்த்தைகள் என்பதைத் தாண்டி செயல்களாக மாறுவதைக் காணவே பிரிட்டன் விரும்புகிறது என்று கூறியிருக்கிறார். காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்திருக்கும் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவை செவ்வாய்க்கிழமை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று உபசரித்துப்பேசிய...

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை வரவேண்டாம் – சுரேஸ்

கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன் நாடு திரும்பியபோதிலும், விமான நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம்,...

அனைத்து நாடுகளினதும் உதவிகளை பெறுவதே எமது வௌிநாட்டு கொள்கை – ஜனாதிபதி

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை, அனைத்து நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலானதாகும் என்றும் இலங்கை அதன் அபிவிருத்திச் செயற்பாடுகளில் எல்லா நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையுடன் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் செயன்முறையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று பிரித்தானியாவின் பாதுகாப்புத் தலைமையகத்தில் ஐக்கிய...

நஞ்சு கலந்த உணவையே நாமின்று உட்கொள்ளவேண்டியுள்ளது

தற்காலத்தில் எமது உணவுகளில் இரசாயணப் பயன்பாடு அதிகரித்தே வருகின்றது. விவசாயத்தில் விஞ்ஞான முறை கலந்து அனைவரும் நஞ்சினை உண்டு கொண்டிருகின்றோம். அந்தளவிற்கு இந்த விவசாயத்தில் இரசாயணத்தைக் கலந்திருக்கின்றோம். இந்தச் சவால்களை ஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் போட வேண்டியவர்களாக இருக்கின்றோம். என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். நேற்று (09) தனது...

சிப்பாய் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், மயிலிட்டி படைமுகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதவிவெல, ரந்தனியகலவைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது - 25) என்ற சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். நேற்றிரவு படைமுகாமுக்குள் உள்ள மாமரம் ஒன்றில் இவர் தூக்கில் தொங்கிய நிலையிலல், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் என்றும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க இந்தியா உதவ வேண்டும்

சுயநிர்ணய உரிமையை இழந்து நிற்கின்ற தமிழினத்தின் தலைவிதியை மாற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உன்னதமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது. இந்தியப் பிரதமரை வரவேற்கும் கடிதம் கடந்த 6 ஆம் திகதி சைவ மகா சபையின் பிரதிநிதிகளால் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம்...

 ரங்கா எம்.பி.யின் கார் தீப்பற்றியது

நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த கார், நாவுல நாலந்தவுக்கு அண்மையில் தீப்பற்றி கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காரை செலுத்தி சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரும் எவ்விதமான காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெயகுமாரிக்கு பிணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை...

சு.கவின் திட்டமிடல் குழு தலைவியாக சந்திரிகா!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அக்குழுவின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று சு.க.வின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எம்.ஆரியசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்த்திருத்தும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா...

மோட்டார் சைக்கிள் விபத்து! மயங்கிய நிலையில் இளைஞர் ஆஸ்பத்திரியில்!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அடையாளக் கம்பத்துடன் மோதுண்டு மயங்கிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கு அண்மையாக இடம்பெற்ற இந்த விபத்தில் அளவெட்டியைச் சேர்ந்த எஸ்.தர்சன் (வயது 19) என்ற இளைஞரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவராவார். உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் நீண்டநேரமாக மயக்கம்...

சட்டமூலம் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – எஸ்.விஜயகாந்

இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஒளடதங்கள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையும் அதன் அடிப்படையில் ஒரு சுதந்திரமான அதிகாரசபை அமைக்கப்படுவதையும் தாம் மனப்பூர்வமாக வரவேற்பதுடன் இது சீரான முறையில் அமூல்படுத்தப்படுவதன் மூலம் இலவச மருத்துவ சேவையில் வரப்பிரசாதங்கள் முழுமையாகக் கிடைக்க வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

கால்நடை வைத்தியர்களுக்கு விடுதி

வடமாகாணத்திலுள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு விடுதிகள் அமைப்பதற்காக இந்த வருடம் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன் திங்கட்கிழமை (09) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் வருடாந்தம் கால்நடை வைத்தியர்களுக்குரிய விடுதிகள் அமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் 4 விடுதிகளும் கிளிநொச்சியில் 2...

 முகத்தை முழுமையாக மறைக்கும் ‘ஹெல்மட் ‘சட்டம் இடைநிறுத்தம்

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைக்கவசம்(ஹெல்மட்) அணியும் சட்டத்தை உடன் அமுல்படுத்தவேண்டாம் என்றும் அச்சட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார். இந்த சட்டம் இம்மாதம் 21ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

யாழ்.மாவட்டத்தில் ஆணும் பெண்ணும் சமம் – அரச அதிபர்

யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்....

வெதுப்பகத்தை யார் நடத்துவது? கேள்வியால் திறந்த தினமே மூடப்பட்டது!

வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின், வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் வவுனியா, செட்டிகுளம், பிரமணாலங்குளம் பகுதியில் பேக்கரி ஒன்று...

மற்றுமொரு வழக்கிலிருந்து பொன்சேகா விடுதலை

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவவீரர்கள் 10 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு சம்பளத்தை வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவரை குற்றமற்றவர் என்று இனங்கண்டே நீதிமன்றம் அவரை இன்று திங்கட்கிழமை...

திருக்கேதீஸ்வரப் பகுதியில் மீளக்குடியமர மக்களுக்கு இடைக்காலத் தடை விதிப்பு!

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை மக்கள் மீள்குடியேற வேண்டாம் என்று புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது அந்த மக்களை குடியேறவேண்டாம் என்று பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts