சுமார் ஆறு வருடங்களின் பின் முதல் முறையாக கடந்த மார்ச் மாதமே இலங்கையில் வாழ்க்கைச் செலவு குறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல வருடங்களின் பின்னர் மக்கள் சிரமம் இன்றி புதுவருடத்தை கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அல்பிடிய நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.