- Tuesday
- April 30th, 2024
வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி அவர்களை, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியமையை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த கூட்டத்தொடர் நகர சபை தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் வியாழக்கிழமை (22)...
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டிகளின் கட்டணம் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அகில் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பஜட் டெக்ஷி சேவைகள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமென்பதே எமது நிலைப்பாடாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, யுத்தத்திற்குப் பின்னர் சொந்த வாழ்விடம் திரும்பிய மக்களினதும்...
அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் கூறியது போன்று, எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு முதல்கட்டமாக 5,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் ஜுன் மாதம் மேலும் 5,000 ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம்...
என்னுடைய மாதந்த சம்பளம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை நான் பெறமாட்டேன். அவற்றை வீடு அபிவிருத்தி நிதியத்தில் வைப்பிலிடுவேன் என்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் தன்னுடைய கடமைகளை நேற்று வியாழக்கிழமை (22) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லாட்சிக்கு முன்மாதிரியாகவே இதனை...
யுத்தத்தால் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களையும் இலங்கையில் நலன்புரி முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் உள்ள 7840 குடும்பங்களுக்கு உட்பட்ட 26056 பேர் உள்ளார்கள் அவர்களை...
விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. வருகிற 26-ந் திகதி, இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும். அப்போது பூமிக்கும்,...
நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதே தனது கணிப்பு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அனலைதீவு பிரேதச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை நேற்று வியாழக்கிழமை காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து...
நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்),...
தற்போதுள்ள எமது பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களை உடனடியாக மாற்றி அரசியல் சார்பற்ற கல்வியறிவு கொண்ட புத்திஜீவிகளை இந்த அவையிலே நியமிக்க வேண்டும். - இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடந்த காலங்களில் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்கள் அரசியல் தலையீடுகளினாலும், தனிநபர் செல்வாக்குகளினாலும் தகுதியற்ற உறுப்பினர்களை நியமித்தமையை...
விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில்...
கிழக்கில் முதலமைச்சர் பதவியைக் கோரும் கூட்டமைப்பின் கருத்து நியாயமானது! – மைத்திரி, ரணில் தெரிவிப்பு
"தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் - அதிக உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் தெளிவாக எடுத்துரைத்தோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை மற்றும் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) என்பன மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நகர எழுச்சி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேலணை பொதுச்சந்தை மற்றும் வடக்கின்...
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - தேர்தல் காலத்தில்...
தற்காலிக, அமைய ( நாளாந்த),பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல் தொடர்பில் 2014.11.12 ம் திகதிய அரசாங்க சுற்றறிக்கை யின் படி (http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2014/T/25_2014(i)(t).pdf) சகல திணைக்களங்கள் மாகாணசபைகள் கூட்டுத்தாபனங்களில் இருந்து விபரங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் வடமாகாண அரச நிறுவனங்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்த...
புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது. எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர். இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2...
நாடாளுமன்ற அமர்வில் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளரினால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் ..... ஆட்சிமாற்றம் ஒன்றின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நாம் ஆதரவளிப்போம். இதேவேளை...
எதிர்வரும் ஜூலை மாதம் முதல், மின்சார கட்டண அறவீட்டு முறையில் மாற்றம் செய்யப்படும் என மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வியாழக்கிழமை(22) இதனை தெரிவித்தார்.
Loading posts...
All posts loaded
No more posts