வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.
இதன்போது கொலைக் குற்றவாளிகளைக் கைதுசெய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
திக்கம் நாவலடி சந்தியில் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“கொலைகும்பல் நீண்டகாலமாக சுதந்திரமாக இயங்கிவருகின்றது” , “இவர்களை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை”, “அப்பாவிகளை கொலைசெய்யும் இவர்களை பொலிஸார் உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்”, “பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டு” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸாரின் பாதுகாப்புடன் செந்தூரனின் இறுதி கிரியைகள் இன்று நடைபெற்றன.