- Saturday
- May 18th, 2024
யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சுற்றிலும் அறிஞர்கள் கூறிய நற்சிந்தனை வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் நடப்பட்டுள்ளன. இந்தப் பதாகைகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் தனித்தனியாக பொறிக்கப்பட்டுள்ளன. ஒலிவர் வென்டல் ஹொம்ஸ், ஹென்றி போட், மார்ட்டின் லூதர் கிங் ஆகிய பல அறிஞர்களின் நற்சிந்தனை வாக்கியங்கள் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முன்னாள் முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்கருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது ஊழியர் சங்கம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. வடபிராந்திய முகாமையாளராக கடமையாற்றிய அவர் கடந்த புதன்கிழமை (22) முதல் வன்னிச் சாலைகளுக்கான முகாமையாளராக மாற்றப்பட்டுள்ளார். வடபிராந்திய முகாமையாளராக அவர்...
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய போக்குவரத்துச் சபை அலுவலகத்தை வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என இரண்டாக பிரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மத்திய பஸ் நிலைய சாரதிகள், நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை (24) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் செய்தனர். வடபிராந்திய சபையின் கீழ் கோண்டாவில், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய 7 சாலைகள் உள்ளன....
நீதிமன்ற உத்தரவை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த 26 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டவே மேற்கண்டவாறு அழைப்பாணை விடுத்துள்ளார். இலஞ்ச ஊழல்...
ராஜபக்ஷர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அவற்றுக்கு முகம்கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ராஜபக்ஷர்கள் கள்ளர்கள் இல்லை என்றும் கூறினார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற...
தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களுக்கு கலாபூஷணம் விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கலாசார அலுவல்கள் திணைக்களம் கோரியுள்ளது. இதன்படி தமிழ் கலைஞர்களை தெரிவு செய்யும் பொறுப்பு இந்து சமய கலாசார திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சிற்பம், ஓவியம், வாய்ப்பாட்டு, நடனம், தவில், நாதஸ்வரம், நாடகம், சினிமா, நாட்டுப்புறவியல், இலக்கியம், நாட்டுக்கூத்து, ஊடகத்துறை, போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்புறச்...
அச்சுவேலி வளலாய் அக்கரை கடற்கரையினை அழகுபடுத்துவதற்காக வலி.கிழக்கு பிரதேச சபை ஒரு மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. இப்பிரதேச சபையின் நடவடிக்கையின் மூலம் இக்கடற்கரை பிரதேசம் உல்லாசக் கடற்கரை பிரதேசமாக அழகுபடுத்தப்படவுள்ளது. நாட்டில் நிலவிய அசாதரண நிலை காரணமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் அக்கரை கடற்கரைப் பகுதி கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச்...
சாவகச்சேரி நகரிலுள்ள உணவு விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு, ஊழியர்களைக் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி நகரிலுள்ள உணவகம் ஒன்றினுள் நேற்றிரவு புகுந்த வாள் தாங்கிய குழுவினர் கடையைச் சேதப்படுத்தியதோடு, ஊழியர்கள் இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். சம்பவத்தில் ஊழியர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார...
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான இறக்குமதித் தீர்வை 40 - 55 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதித் தீர்வை 10 - 30 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைப் போர் குறித்து பிரபல மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் ராஜன் ஹூல் தற்போது எழுதியிருக்கும் “ விழுந்த பனை- ராஜினியிலிருந்து போரின் முடிவு வரை “ என்ற புத்தகம் மீதான ஒரு விவாதம் நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கிறது. ஏற்கனவே பேராசிரியர் ராஜன்...
நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை வியாழக்கிழமை (23) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தனர். அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றை வீதியில் கடமையில் இருந்த நெல்லியடி பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். அவ்விடத்துக்கு வந்த பிறிதொரு நபர் தனக்கு நெல்லியடி பொறுப்பதிகாரியை...
வலிகாமம் வடக்கில் கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக வீமன்காமம் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு தயாராகும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 1 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியில் தற்காலிக கொட்டகை அமைக்கத் தேவையான உபகரணங்கள் வியாழக்கிழமை (23) வழங்கப்பட்டது. சங்கானையைச் சேர்ந்த பசுமைப் புரட்சியாளன் செ.கோபாலகிருஷ்ணன் என்பவர் வழங்கிய உதவியானது...
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதையே நாங்கள் அதிகம் விரும்பினோம். ஆதலால், 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்காக அதிகம் செய்யவில்லையென்பது எங்களுக்கு ஏமாற்றமாக இல்லை' இவ்வாறு வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமையுடன் (23) முடிவடைந்துள்ளமையை அடுத்து, இந்த 100 நாட்கள் தொடர்பில்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன்னர் சென்று பார்வையிட்டார்.
இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி நடாத்தும் இயல் இசை நாடக விழா எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் 4 ம் திகதி வரை இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக குறுந்திரைப்பட போட்டியொன்றை நடத்த சுற்றாடல் இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. இயற்கை வரைந்த ஓவியம் என்ற தலைப்பில் இக்குறுந்திரைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது. அதிகூடியது 5 நிமிடங்களில் சுற்றாடல் தொடர்பில் இக்குறுந்திரைப்படங்களை தயாரித்து அனுப்ப முடியும். ஒரு போட்டியாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை அனுப்ப முடியும். ஒரு டிவிடியில்...
சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவேற்றுச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு தரப்பும் எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும், தமது கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தன என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார். தேசிய நிறைவேற்றுச் சபையில்...
சர்ச்சைக்குரிய பாலியல் வழக்குக் குற்றவாளியான சுவாமி பிரேமானந்தாவின் சகாக்கள் மூவரை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் என்று செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், வடக்கு முதல்வரின் கோரிக்கை குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் வெளியிட்டிருக்கின்றன. திருச்சியில் ஆச்சிரமம் அமைத்து செயற்பட்டு...
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டுள்ளது. அரசியல் வாதி ஒருவரின் தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த மாற்றம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சபைக்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் போக்குவரத்து சபையினர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த...
வடக்கு மாகாணசபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை, வடக்கு மாகாண சபை இது குறித்த தீர்மானம் ஒன்றை சபை அமர்வின்போது...
Loading posts...
All posts loaded
No more posts