- Thursday
- February 19th, 2026
யாழ் மாவட்ட செயலகத்தின் 50 ஆவது நிறைவினையொட்டி இன்று (21) ஆம் திகதி பொன்விழா கொண்டாடப்படுகிறது. யாழ் மாவட்டத்தின் தலைநகரில் விசாலமாக அமையப்பெற்ற மாவட்ட செயலகமானது அனைத்து மாவட்ட மக்களும் இதுவரை காலமும் அளப்பெரிய நற் சேவைகளை ஆற்றி வருகின்றது. இனிமேலும் ஆற்றி வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இலங்கையின் மூன்றாவது பெரிய அலுவலகம் என...
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (21) சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) காலை 10 மணிக்கு பிறக்கும் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இலங்கையின் வரலாற்றில்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திலேயோ அல்லது சர்வ கட்சியிலேயே இணையக் கூடாதென கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஈழத் தமிழரின் நிலை என்ன...
சிறுவயது முதலே பொதுப்பணிகளில் ஈடுபட்டு, இலட்சிய தாகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் தலைவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாகவும் பரிணாமிப்பது உண்டு. இதற்கு அமரர்,மாமனிதர் சிவமகாராசா ஓர் உதாரணம். ஆனால், இன்று அரசியல்வாதிகள் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறார்கள் என்று வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமரர் சி.சிவமகாராசா கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதோடு, இரண்டு...
வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற கமநலசேவைகள் திணைக்களம் எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதியில் கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 1997ஆம் ஆண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக...
யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலானது உண்மையாகவும் நேர்மையாகவும் நடை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்க முனைகின்றன என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது....
செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஒன்றின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், அப் பாடசாலையின் அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்களால் சிறுவர் மற்றும் மகளிர் நன்னடத்தைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த அதிபரை பாடசாலைச் சமூகம் இடைநிறுத்தியிருந்ததோடு, நன்னடத்தைப்...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதேகவுடன் இணைந்து சமரச அரசாங்கம் ஒன்றை...
அபுதாபி சென்று அதனூடாக இத்தாலி செல்ல முயன்ற யுவதியை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த யுவதியை இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக...
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நிகழ்ந்த கவனிக்கத்தக்க சில சம்பவங்கள் நடந்தேறின. அவற்றில் சில பின்வருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னிலைப்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இளைஞர், யுவதிகள் மூலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தோல்வியடைந்தார். கிளிநொச்சியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இரண்டரைப் பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஒரு பெண்ணை கைதுசெய்துள்ளதாகவும் யாழப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆலயத்திற்கு வருகை தந்த பெண்ணிடம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நகைகளை கொள்ளையிட்டுள்ளார். சந்தேகநபர் ஆலய வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்....
நல்லூர் பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த 3 வயதுச் சிறுவனை மோதிய கனரக வாகனம், சிறுவனின் கைகளில் ஏறிச் சென்றதில் படுகாயமடைந்த சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபாலையைச் சேர்ந்த சசிக்குமார் கயூட்சனன் என்ற சிறுவனே படுகாயமடைந்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் பற்றி கூட்டமைப்பின் கூட்டத்திலே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். அமையவுள்ள அரசாங்கம் தொடர்பில்...
தேர்தல் காலப்பகுதியில் பிரதேச செயலாளர் ஒருவர் உட்பட அரச அதிகாரிகள் சிலர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார்கள் என இருவேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரி ரீ.கனகராஜ் தெரிவித்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைக்கு அனுப்பியமை தொடர்பில் மேற்படி பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கபெற்றிருப்பதாக கனகராஜ் கூறினார். அதேபோல்,...
தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி நாடாளுமன்றம் சென்று அரசியலை தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும்,...
இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றமைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றம் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி குறித்தும் பான்கீமூன் பாராட்டுக்களையும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்கிய...
தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான தகைமை கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (19) குமார் சங்கக்காரவிடம் கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதேவேளை இன்றைய தினம ஆரம்பம் ஆகும் இந்திய இலங்கை போட்டியுடன் சங்கக்கார தனது டெஸ்ட்...
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தினில் தெரிவித்தது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டி தீர்வினை நோக்கி பயணிக்குமானால் அதற்கு ஆதரவளிக்கவும் அவ்விடயத்தினில் கொள்கை ரீதியில் உடன்பட்டால் இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. தேர்தலில் செயற்பட்ட தமது ஆதரவாளர்கள் மற்றும் வாக்களித்த மக்களிற்கான நன்றி தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று யாழ்.ஊடக...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று ஆஸ்திரேலியா எம்.பி. லீ ரியன்னோன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிட்டார். எப்படியும் பிரதராகிவிடுவோம்.. தம் மீதான போர்க்குற்றவிசாரணையில் இருந்து தப்பித்துவிடுவோம் என்று அவர் கனவு கண்டார். ஆனால் மகிந்த...
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியில் அவரது வழிகாட்டலிலும் விடுதலைப் புலிகளின் காலத்தின் நீட்சியாக என்னுடைய பயணத்தை எனது மக்களின் உரிமைக் காகவும் தன்னாட்சிக்காகவும் பாடுபட்டு தொடர்ந்தும் செயற்படுவேன் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன்...
Loading posts...
All posts loaded
No more posts
