- Thursday
- November 20th, 2025
கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (04.09.2015) இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வடமாகாணக் கைத்தொழில் திணைக்களம் நடாத்தும் மாகாணக் கைத்தொழில் கண்காட்சியில் பங்கேற்று முதலமைச்சர் ஆற்றிய உரை அப்படியே வருமாறு, தலைவரவர்களே, விசேட அதிதி அவர்களே, மாகாண உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, இவ்வருடத்தைய மாகாண கைத்தொழில் கண்காட்சியில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது தொழில்த்துறைத்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டுக்கு மாற்றம் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அதனை...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, அமைச்சரவையில் 48 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் 03.காமினி ஜயவிக்ரம...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர (வடக்கு) வாசல் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து கோபுரத்தில் உள்ள நவ கலசத்திற்கும் அபிஷேகம் செய்ய நவ கும்பங்கள் சிவாச்சாரியார்களின் மந்திர ஓதல்களுடனும் மங்கள வாத்தியங்களுடனும் கும்பங்கள் வெளி வீதி...
இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:, கடந்தமாதம் இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதான எதிர்கட்சியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு, அதன்...
சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து...
யாழ். மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட காசநோய் கட்டப்பாட்டு அதிகாரி ஆர். மாணிக்கவாசகன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் காசநோயின் தாக்கம் குறைவடைந்து காணப்படுகின்றது. அதேவேளை ஒன்று தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம்...
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது.இதனிடையே, தேசிய அரசாங்கத்தின் 48 அமைச்சரவை அமைச்சர்கள் 45 பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை 127 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு ஆதரவாக 143 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. யோசனைக்கு ஜே.வி.பி, தேசிய சுதந்திர முன்னணி,...
பொலிஸ் அதிகாரியொருவரை கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதேசப் பொறுப்பாளருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவரை நிரபராதி என தீர்ப்பளித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விடுதலை செய்தார். கடந்த 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி இணுவில் பிரதேசத்தில் யாழ்.பொலிஸ் அத்தியட்சகரான சாள்ஸ் விஜயவர்த்தன என்பவரை கொலை செய்தார்...
இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை...
குத்தகை நிறுவனங்கள் மற்றும் தவணைக கட்டண அடிப்படையில் பொருட்களை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணங்களை வசூலிப்பதற்காக மாலை 5 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்கள், மாலை 5 மணிக்கு பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிதி சேகரிப்பதை தடை செய்யவேண்டும்...
வடமராட்சி வதிரிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த 4 பேரையும் 4 மணித்தியாலங்கள் நீதிமன்ற வளாகத்தைத் துப்பரவு செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, நேற்று வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்தார். இந்த 4 பேரும் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சென்று மாணவிகளுடன் சேஷ்டை புரிந்து வருவதாக பருத்தித்துறை...
ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது...
முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை தொடர்பிலான விசாரணைக்கு குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி என்பவரை கையளிக்குமாறு இந்தியா கோருமாயின் அவரை கையளிப்பதற்கு இலங்கை தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிடமுடியாது'' - என்று விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தெரிவித்துள்ளார். பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி தோண்டித் தேடுவதை விடவும், அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்....
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அவுஸ்திரேலிய கடற்படையின் மெல்பர்ன் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் சாகர மற்றும் சமுத்ர கப்பல்கள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரேத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் பிராந்திய கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து பயனுள்ள மற்றும் திறமையான பங்களிப்பை செய்கின்றது....
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை பகல் 02.00 மணியளவில் புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் வடக்கு - புத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கஜிபன் (வயது 21) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். புங்கங்குளம் புகையிரத...
வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று வலிகாம வலயக் கல்விப் பணிப் பாளர் சந்திரராஜா தெரிவித்தார். குறித்த பாடசாலையிலிருந்து இட மாற்றம் செய்யப்பட்ட அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நிய மிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலைமையை அடுத்தே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று புதன்கிழமை (02.09.2015) ஆரம்பமாகியுள்ளது.நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்துள்ளார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற விவசாயச்...
புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார். அவ்வாறிருக்கும் போது இந்த நியமனம் செல்லுபடியாகுமா என்றும் அவர் கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர்...
Loading posts...
All posts loaded
No more posts
