Ad Widget

பொலிஸாருக்கு வதிவிட செயலமர்வு

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான, பெருங்குற்றம் மற்றும் சிறுகுற்றம் தொடர்பான மேலதிக வதிவிடப்பயிற்சி நெறி காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பயிற்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (16) முதல் நடைபெற்று வருவதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நடைபெற்றுவருகின்றமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸ்...

பொதுத்தேர்தலுக்குப் பின் எரிபொருள் விலை உயரும்! – பந்துல

பொதுத்தேர்தலின் பின்னர் நிச்சயமாக எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கட்டாயமாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தற்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லீற்றர் பெற்றோல் விற்பனையின் மூலம் 30 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது....
Ad Widget

வித்தியா படுகொலை சந்தேகநபர்களிடம் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை?

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை வெறுமனே படுகொலையாகவோ, வன்புணர்வு நிகழ்வாகவோ எடுக்க முடியாது. வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் இருந்த கோலம், இது வெறும் வன்புணர்வு, படுகொலை என்பதைக் காட்டி நிற்கவில்லை. எனவே, இவ்வழக்கில் உண்மை நிலை என்னவென்று கண்டறியப்பட வேண்டும். அதற்கு சந்தேக நபர்கள் உரிய முறையில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட...

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் அம்பாள்குளத்தைச் சேர்ந்த மரியதாஸ் உசாராணி (வயது 36 ) என்பவராவார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண் மனநலம் குன்றியவராவார். தனது சகோதரியுடனேயே வசித்து வருகின்றார். நேற்றயதினம் சகோதரி கடைக்குச்...

இளைஞர்களைத் தாக்கிய சந்கேநபர்கள் கைது!

வறுத்தலைவிளான் பகுதிக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் மூவர் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு குறிப்பிட்ட இருவரையும் கைது செய்த சுன்னாகம் பொலிஸார் அவர்களைதெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட இடம் தெல்லிப்பழை பொலிஸ்...

எமது விடுதலைக்காக இன, மத பேதங்களைக் கடந்து பற்றுறுதியுடன் செயற்படுங்கள்! – தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஏதாவது நன்மை விளையலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தை நோக்குவதால், எமது விடுதலைக்காக இன, மத பேதங்களைக் கடந்து நீதி, நியாயம் வேண்டி அனைத்துத் தரப்பினரும் மனிதநேயத்துடன் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் செயற்படவேண்டும்' - என்று அனைத்து இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் அமைப்பு, அறிக்கையொன்றினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளது. தமது விடுதலை...

நாடாளுமன்றம் விரைவில் கலைப்பு; தேர்தலை எதிர்கொள்ள ஓரணியில் திரளுங்கள்! – ஜனாதிபதி

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். வெவ்வேறு திசையில் பயணித்தால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியாது எனவும் அவர் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துவருவதால்,...

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தொழில் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எத்தகைய கருத்தியல்களை அல்லது தொலைநோக்கைக் கொண்டிருந்த போதும், ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு தாமரைத்தடாக...

முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்கப்போவதாக மாவை தெரிவிப்பு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டு அவர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரனிடமிருந்து வருகின்ற பதிலையடுத்து, உண்மை நிலைமையை செய்தியாளர்களின் ஊடாகத் தெளிவுபடுத்துவதற்குத்...

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு புதிய வைத்தியர்கள், சேவை நேரமும் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குப் ஒன்பது வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநோயாளர் பிரிவில் 35 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் இதுவரை காலமும் 15 வைத்தியர்களுடன் மாத்திரமே இயங்கி வந்தது. இந்த நிலையில் இன்று 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் புதிய வைத்தியர்களையும் இணைத்து 24 வைத்தியர்களுடன் இயங்கவுள்ளது. இதுவரை காலமும் இரவு...

நாளை முதல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா ஆரம்பம்

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா நாளைய 17.06.2015 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது. 29.06.2015 திங்கட்கிழமை சப்பறம் 30.06.2015 செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா 01.07.2015 புதன்கிழமை தீா்த்தத் திருவிழா 02.07.2015 வியாழக்கிழமை கொடி இறக்கம் மற்றும் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது. திருவிழாக் காலங்களில் தினமும் மாலை கோவில் முன் கலையரங்கில் கலை...

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முறைப்பாடு

பொதுமக்களிடமிருந்து பெருமளவான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் யாழ். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பி.சஞ்சீவன், கொழும்பிலுள்ள ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் செய்வாய்க்கிழமை(16), முறைப்பாடொன்றை பதிவு செய்தார். அதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் உடனிருந்தார்.

நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: ஒருவர் கைது

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், பிறவுண் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பெருமாள் கோவில் பகுதியில் வைத்து, கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (15) மாலை கைது செய்தனர். நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில்...

யாழில் 7379 பேர் மாற்றுத்திறனாளிகள்!

யாழ் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக 7379 பேர் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 1100 சிறுவர்களும் 1320 பேர் போரால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை நேற்றைய தினம் மாற்றுத் திறனாளிகளை சமூகத்துடன் சேர்ப்பதற்கான செயற்திட்டத்தின் கீழான விசேட செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்ததுடன் குறித்த செயலமர்வில் மாற்றுத்...

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு தொடர்ந்தும் மறியல்

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் திகதி காரைநகர் வலந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து ஒருவரைத்தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவரை கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்தனர். ஐவரும் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளமறியலில்...

4ஆம் மாடியில் சந்­தேக நபர்கள்

மாணவி வித்­தியா படு­கொலை சந்­தேக நபர்கள் ஒன்­ப­து­பே­ரை­யும் 30 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசா­ரிக்க ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நேற்று அனு­மதி வழங்­கிய நிலையில் அவர்கள் ஒன்­பது பேரும் நேற்று மாலை 4.00 மணி­ய­ளவில் கொழும்­புக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­னர். கொழும்பு கோட்­டையில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­திற்கு (நான்காம் மாடி)டபிள்யூ.பீ. என்.ஏ.9960 என்ற...

வித்தியா படுகொலை வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் சிங்கள சட்டத்தரணிகள் ஆஜரா?

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரண விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது சிங்கள சட்டத்தரணிகள் மூவர் மன்றில் ஆஜராகினர். குறித்த சட்டத்தரணிகள் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜராக வந்தனரா அல்லது வேறு காரணங்களுக்காக வந்தனரா என்பது நேற்று விசாரணைகள் நிறைவுறும் வரை தெளிவுபடுத்தப்படவில்லை. இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில்...

மாகாணங்களின் தேவைகள், அபிலாசைகளை கொண்டே மத்தியஅரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்! – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும்...

பருத்தித்துறையில் இரவு,அதிகாலை வேளைகளில் ஒலிபெருக்கிப் பாவனைக்கு தடை!

பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் நீதி, நியாயாதிக்கப்பகுதிக்குள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஒலிபெருக்கிப் பாவனைக்கு நீதிமன்று தடைவிதித்துள்ளது. பொதுநலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக மாவட்ட நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார். பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடிப் பொலிஸ் பிரிவுகளில் ஆலயங்கள், விசேட விழாக்கள் போன்றவற்றில் அதிகரித்த ஒலியுடன் ஒலிபெருக்கிகள் அலறவிடப்படுவதால் மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் நீதிபதி...

தெல்லிப்பழையில் விறகுவெட்டச் சென்ற இளைஞர்களை கட்டிவைத்து தாக்கிய கும்பல்!

தெல்லிப்பழையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற இளைஞர்கள் மற்றொரு இளைஞர் குழுவினால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஏழாலை, மல்லாகம் பகுதியில் குறிப்பிட்ட சில இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதுடன் மதுபோதையில் கெட்டவார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டு வீதியால் செல்பவர்களை அச்சுறுத்தி...
Loading posts...

All posts loaded

No more posts