Ad Widget

கைதிகள் தினத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி முல்லைத்தீவில் போராட்டம்

கைதிகள் தினமான கடந்த சனிக்கிழமை சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக்கோரி முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Mulliththevu- (6)

மேற்படி போராட்டம் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவூ தனியார் பஸ் நிலையத்தில் ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்கள் அங்கிருந்து ஊர்வலமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக சென்று அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Mulliththevu- (7)

மேற்படி நிகழ்வூ மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் சகாயம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது.

மேலும் படங்களுக்கு…

Related Posts