Ad Widget

மதுபான நிலையத்தில் சூதாட்டம்! வட்டுக்கோட்டையில் ஐவர் கைது!!

மது விற்பனை நிலையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

மூளாய் பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தின் பின்பாக உள்ள மறைவிடம் ஒன்றில் இருந்து இந்த ஐந்து பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு குறிப்பிட்ட மது விற்பனை நிலையத்தில் சூதாட்டம் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து தீடீரென அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

இதன்போது குறிப்பிட்ட ஐந்து பேரும் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டனர். இவர்களிடம் வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

Related Posts