- Wednesday
- April 29th, 2026
நாமல் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக, பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது. தாஜுடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதம் வேகமாக பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை நேற்று பான் கீ மூன் வெளியிட்டார். குறித்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளின்...
மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் நேற்று கடற்படையினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏ.யூட்சன் டெரன்சியன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். குறித்த மீனவர்கள் 4...
சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்களுக்கு தொடர்புள்ளதாக என்பது பற்றி விசாரிப்பதற்காக இந்திய பொலிஸ் அதிகாரிகள், இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐதராபாத் பொலிஸார் இங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்கள் இருவருக்கு தொடர்புள்ளதாக...
வடக்கு, கிழக்கில் காணாமல்போகச் செய்யப்பட்டோர் மற்றும் நாட்டில் இரகசிய முகாம்கள் எங்கு இருக்கின்றன என்பது தொடர்பில் அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். அத்துடன், காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என யாழில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிஙக் தெரிவித்த...
காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் முறைமை ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அத்துடன், இலங்கைச் சட்டத்திலும் இதற்கு இடமில்லை. அதற்கான அதிகாரமும் அரசுக்கு இல்லை. அதனால் மேற்படி தரப்பினருக்கு 'மரணச் சான்றிதழ்' வழங்குவதற்குப் பதிலாக 'காணாமல் போனோர் சான்றிதழ்' இன்னும் இரு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன சபையில் தெரிவித்தார்....
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் வற்புறுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் அல் ஹுஸைன் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர்...
நாட்டில் முன்னிருந்த அரசியல் தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு செல்வதில் இருந்து விடுபட்டமைக்கு காரணம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனாலேயே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் மின்சாரக் கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அன்றிருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டிருந்த போதும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற...
வீதி சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக நாடு பூராகவும் பிரதான நகரங்களில் உள்ள தபால் காரியாலங்களை இரவு 8 மணி வரைக்கும் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தபாலகங்களை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கு மாகாணத்தில்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,...
மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்டத்திற்காக புதிய அலுவலகம் இன்று காலை இல - 289 கண்டி வீதியில் உத்தியபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னனியின் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்வு மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச்...
இலங்கையிலுள்ள டயலொக் நிறுவனமும் எயார்டெல் நிறுவனமும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. economic_times எனும் பொருளியல் சஞ்சினை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டயலொக் நிறுவனம் இந்நாட்டில் 10.5 மில்லியன் தொடர்பாளர்களைக் கொண்ட ஒரு வலைப் பின்னலைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சந்தையில் 41 வீதத்தை தம்மிடம் வைத்துள்ளது. எயார்டெல் நிறுவனம் 2.3 மில்லியன் தொடர்பாளர்களை தம்மிடம் வைத்துள்ளது....
வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்தப் பரிசோதனை வீடமைப்புத் திட்டம், மல்லாகத்திலும் வளலாயிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் வடக்கு - கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது. 2...
வடமாகாண சுகாதார அமைச்சும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவதுறையும் இணைந்து 35ஆம் அணி மருத்துவ மாணவர்கள் ஊடாகத் தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’ எனப் பெயரிடப்பட்டு வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்நிகழ்வுகள் கடந்த மாசி மாதம்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் குழப்பத்தை தோற்றுவித்து அதிலிருந்து குளிர்காய்வதற்கு சில மூன்றாம் தரப்பு பிரிவினர் முயற்சித்து வலுவதாக யாழ்ப்பாணப் பல்கழலக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையை இன முறுகல் என்று திரிபுபடுத்தி சில ஊடகங்களும் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள...
ஆறு வார குழந்தையாக இருந்த போது பிரித்தானிய தம்பதிகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பெண், 28 வயதில் மீண்டும் தாயாருடன் இணைந்து கொண்டார். இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார். அன்று முதல் அந்த...
வடக்கின் ஆளுநராக முன்னாள் மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் நிர்வாக திறன் அறிந்தவர் என்பது தெரியும் ஆனாலும் தமிழர்கள் ஆட்சி செய்யும் ஒரு மாகாணத்துக்கு தமிழரோ அல்லது முஸ்லிமோ தான் ஆளுநராக வரவேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவ்வாறு தொடர்ந்து சிங்களவர் ஒருவர் எதிர்ப்பை மீறி நியமிக்கப்பட்டால் அதற்கு எதிராக...
வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்கள் என்பன கைதடியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சம்பிராதாயபூர்வமாக மாற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வட மாகாண முதலமைச்சர்...
நெல்லியடி – கொடிகாமம் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மயங்கிக் கிடந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வீதியில், கன்கொல்டலை என்னும் இடத்தில் மயங்கிக் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிலையில், அப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....
Loading posts...
All posts loaded
No more posts
