Ad Widget

மைத்திரியின் அரசு மீது மோடி அதீத நம்பிக்கை! – ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்தார் சுஷ்மா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய அரசும் இலங்கையின் புதிய தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கீழான அரசின் மீது அதிகம் நம்பிக்கை வைத்துள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

susma meet MS 887d

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசு பூரண ஆதரவு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நேற்று சனிக்கிழமை பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்படி விடயங்களைக் கூறினார்.

மேலும் இந்தியாவும், இலங்கையும் அண்மையுள்ள நாடுகளைத் தவிர இரண்டு நாடுகளும் மிகவும் நெருக்கமான நட்புறவைக் கொண்டாடும் நாடுகள் என்றும் தெரிவித்த அவர், இதன் காரணமாகத்தான் ஜனாதிபதி மைத்திரிபால பதவியேற்றதும் அவரது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவைத் தெரிவு செய்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இதற்காக இந்தியா சார்பில் தனது நன்றியையும் தெரிவித்த சுஷ்மா சுவராஜ், அயல்நாடுகள் என்ற ரீதியில் இலங்கைக்கே இந்தியா அதிக முக்கியதுவம் வழங்குகின்றது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் மலையக மக்களின் கல்வி மற்றும் சுகாதார விடயங்களை மேம்படுத்த இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு இந்திய அரசு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதியளித்த சுஷ்மா சுவராஜ், இதற்காக ஐடெக் தொழிநுட்ப நிறுவனத்தின் உதவியுடன் நிதி வழங்கவதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாவுடன், இந்திய வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சிங்ஹா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts