- Saturday
- November 22nd, 2025
மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தெரிவித்தார். மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. தீருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு வேலைகள் காரணமாக இம்முறை மகா...
கூகுல் பலூன் வேலைத்திட்டம் சோதனை முயற்சி மாத்திரமே என்ற நிலையில், அது குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் துளியளவு முதலீடு கூட இன்றி இந்த வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனம் முன்னெடுக்கிறது. கடந்த காலத்தில் பொது மக்களின்...
வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 488.5 ஏக்கர் காணிகளில் பெக்ஹோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை, இராணுவம்வழங்க மறுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார். மேலும், மேற்படி காணிகளை உரிமையாளர்களிடம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வரையில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடவேண்டாம் என இராணுவம் பொதுமக்களுக்கு கூறி வருகின்றது....
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸை தளமாகக்கொண்ட `Total' என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளது எனவும், இதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது எனவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பிரான்ஸின் பல்தேசிய நிறுவனத்துக்கும், இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்துக்கும் இடையில் நேற்று இது தொடர்பான கூட்டு...
வெலிக்கடைச் சிறைச்சாலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ள `ஜே’ விடுதிப் பகுதியில் கைத்தொலைபேசி நுண்அலைகளைத் தடுக்கும் கருவிகள் பொருத்தப்படவுள்ளன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, சிறைக்கூடத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், யோஷித ராஜபக்ஷ தடுத்துவைக்கப்பட்டுள்ள 'ஜே' விடுதி அருகில்...
கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இன்று (20) மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாப்பணிகளைத் தொடர்ந்து நாளை (21) காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, அதி வணக்கத்திற்குரிய யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத் திருப்பலி பூசையும்...
ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று (20) யாழ். நகரில் ஆரம்பமாகிறது. “நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளது. 37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10,000க்கும் மேற்பட்ட சாரணர்கள் இதில் பங்குகொள்வர். 05 வெளிநாடுகளிலிருந்து 17 தலைவர்கள், 110 சாரணர்கள் இதில் பங்கு கொள்வரென பிரதான...
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில், மூடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் நீதிமன்றம் பொலிசாருக்கு நேற்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த கிணறு மண் நிரப்பி மூடப்பட்டுள்ளதால், போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளே இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்ட்டுள்ளது. அங்கு கிணறு ஒன்று இருந்ததை...
அவுஸ்திரேலியாவின் மெல்பேனி நகரில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த நட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நேற்று முன்தினம் (18) இரவு 8.00 மணிக்கும் 9.25இற்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. 48 வயதான பிரசாத் சோமவன்ச என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதுவரையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏம்.எம்.எம்.றியால் நேற்று கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு...
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் ஒருவர் வட மாகாணத்திற்கு கிடைத்துள்ளார். அதற்கு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் தெங்கு பயிர்ச்செய்கைக்கான இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வடமாகாணத்திற்கான ஆளுநராக இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில்...
வன்னிப் பிரதேசங்களில் கடமையாற்றுகின்ற பல ஆசிரியர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்து தமது அர்ப்பணிப்பான சேவையைச் செய்து வருகின்றனர். அதிலும் அனேக ஆசிரியர்கள் பெண்களாகும். இவர்கள் தங்கியுள்ள விடுதிகள் இரவு நேரங்களில் தட்டப்பட்டு அங்குள்ள ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பவம் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த பெண் ஆசிரியர்களின் விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடுதிக்கு அருகில் இராணுவ முகாம்...
வவுனியா உக்குளாங்குளம் பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 13 வயது சிறுமி,துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா அவசர மரணபரிசோதகர் நேற்று தீர்மானித்துள்ளார். குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி பாடசாலைக்கு செல்ல முடியாது என கூறி வீட்டில் இருந்துள்ளார்.எனினும் அவரது மூத்த சகோதரன் பாடசாலைவிட்டு வீட்டிற்கு வந்த...
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய குறித்த மாணவி நேற்று மாலை தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று வந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் கிணற்றில் மாணவி பாய்ந்த சத்தத்தை அறிந்த அயலவர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் குறித்த...
இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழி்க்கு அமைய அவர்கள்...
இறுதிக்கட்டப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்ததில் இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவில் சரணடைந்து காணாமல்போனவர்கள் என தெரிவிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இராணுவப்...
அரசியல் கைதிகள் விவகாரம் - காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் எதிர்வரும் 23ம் திகதி -செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை வெறுமனே விவாதத்துடன் முடிவடைந்துவிடக் கூடாது. இதனூடாக ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படக்கூடியதாக இருக்கவேண்டும். என்று தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் கோரிக்கை...
குருநாகல் மாவட்டத்தில், நோய் காரணமாக உயிரிழந்த தந்தை ஒருவருக்கு எச்ஐவி இருந்ததாக பரவிய வதந்தி காரணமாக, அவரது 6 வயது மகனுக்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் அனுமதி மறுத்துள்ளன. பிரதேசத்து கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த சிறுவனின் தாய் கூறினார். இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள்...
'24' படத்தின் மூலம் இழந்த வெற்றியை மீண்டும் மீட்டெடுத்து ஆக வேண்டும் என்று சூர்யா '24' படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம். 'பசங்க 2' படத்தில் அவர் நடித்திருந்தாலும் அது ஒரு சிறப்புத் தோற்றம்தான், அவருடைய ரசிகர்களுக்கான படமாகவும் அந்தப் படம் அமையவில்லை. 'அஞ்சான்' படத்தில் படிந்த அவப் பெயரைத் துடைக்க 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தையும்...
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவருக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வௌிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் பிரதம...
Loading posts...
All posts loaded
No more posts
