Ad Widget

குப்பை கொட்டினால் 1000 ரூபாய் அபராதம்

யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட நல்லூர் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியன செம்மணி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தன.

தற்போது அங்கு விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவ்விடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.

தொடர்ந்து குப்பை கொட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியன அறிவித்துள்ளன

Related Posts