மகனை தாயகம் அனுப்புமாறு இந்தியப் பிரதமரிடம் சாந்தனின் தாயார் கோரிக்கை!

இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன்...

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாயாக அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாய் 73 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம் கொள்வனவு விலை 290 ரூபாய் 06 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228 ரூபாயாகவும் கொள்விலை 215 ரூபாயாகவும்,...
Ad Widget

ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை சந்தித்தார் சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது,வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய...

இலங்கையின் LGBTQ சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு!!

இலங்கையின் LGBTQ சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுயமரியாதை பவனி குறித்து தமிழ்தேசியமக்கள் முன்னணயின் ஆதரவாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிடடுள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய மக்கள் இதனை தெரிவித்துள்ளது. எங்கள் கட்சியின் உறுப்பினரான நபர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நிச்சயமாக இந்த விடயத்தில் எங்கள்...

யாழில் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் கைது!!

காரைநகரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி தப்பிச்செல்ல முற்பட்டபோதே யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் திகதி காரைநகர் ஊரி பகுதியில் விசேட...

இரண்டு நாள்களாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சையை நாடவேண்டும்!!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்தார். தினசரி நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுப்பதன் மூலம் தனிநபர்கள் போதுமான...

டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அபராதம்!!

வீடுகளில் அல்லது வணி நிறுவங்களின் டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கும் நடைமுறை அடுத்தவாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. சமீப வாரங்களாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறன்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இதுவரை 43...

கோண்டாவிலில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!!

கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 09 அட்டைகளில் 90 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் மீட்கப்பட்ட மாத்திரைகளையும் , கைது செய்யப்பட்ட நபரையும் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!! – குறைக்கப்படும் மின்சார கட்டணம்!!

மின் கட்டண திருத்தத்திற்கமைய, மீண்டும் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பிற்கமைய, 0...

புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி அதிரடித்தீர்ப்பு!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது...

சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் : கஜேந்திரகுமார்

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட...

யாழ் சென்னை 100 ஆவது விமான சேவை இன்று!!

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான 100 வது விமானசேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனாத் தொற்று இடர்காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானசேவைகள் பின்னர் 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையானது...

கஜேந்திரகுமார் நாடாளுமன்றுக்கு வருகைத் தரவிருந்தபோது அவரை கைது செய்யவோ விளக்கமறியலில் வைக்கவோ முடியாது!!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் குறித்து தம்மிடத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற...

‘சட்டத்தை மீறியது பொலிசாரே’… முன்னணியினர் வாதம்: கைதான இருவருக்கும் பிணை!

மருதங்கேணியில் பொலிசார் துப்பாக்கி முனையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை அச்சுறுத்திய விவகாரத்தில் விளக்மறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (7) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டஆலோசகர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்ச நீதிமன்றம் இருவரையும் பிணையில் விடுவித்தது. அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அடம்பிடித்த பொலிசாருடனான சச்சரவை ஒளிப்படம் பிடித்த, பொலிசார் துப்பாக்கியை நீட்டி...

கஜேந்திரகுமார் கைது விவகாரம் : மருந்தங்கேணி பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்தள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பகுதியில், கடந்த 3 ஆம்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவரை அழைத்து வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்படக்கூடாது என சபாநாயகர் என்ற...

நெடுந்தீவு கொலை வழக்கில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு!!

நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார்....

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் நிலையில் இந்த அழைப்பு பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்க உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சபாநாயகரிடம்...
Loading posts...

All posts loaded

No more posts