- Saturday
- August 23rd, 2025

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. சிறுதானிய உணவுகளான கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இங்கு காட்சிப்...

யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவிகள் இருவரில் ஒருவர் யாழ்.கோட்டைப் பகுதியில் வைத்து பாடசாலை சீருடையுடன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. மற்றைய மாணவி வெளிமாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த நிலையில் வெளிமாவட்டத்தில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு மாணவிகளில்...

நாட்டில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கமைய, 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுதொடர்பான வழக்கினை அவதானி;ப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு எழுதியுள்ள கடித்தில் புலம்பெயர் அமைப்புகள்...

தம்மில் இருந்து மாறுபட்டு சிந்திப்பவர்களை துரோகிகளாகவோ அல்லது அரசாங்க அணியில் பயணிப்பவராகவோ அடையாளப்படுத்துகின்ற பண்பு ஏதோவொரு வழியில் எமது தமிழ் அரசியல்வாதிகளிடம் வந்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், மாறுபட்ட நிலைப்பாட்டாளர்களைத் துரோகிகளாக சித்தரிப்பது எமது தரப்பிலுள்ள பலவீனத்தையே காண்பிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (14) இடம் பெற்றது. கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி எங்களோடு நடத்திய பேச்சு வார்த்தையிலும்...

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (15) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.311.60 ரூபாவாகவும், விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் (Anopheles stephens) என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை மற்றும்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள...

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் கோஷ்டி மோதல்கள்/ போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார். யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி நேற்றைய...

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது. குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும்...

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில்,36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நயினாதீவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்று முன்தினம் (13.06.2023) இரவு இரண்டு பெண்கள் வசித்துவரும் வீட்டில் அவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டுக் கூரையை உடைத்து வீட்டில் இறங்கிய திருடர்கள் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை...

கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி முன்பள்ளி சிறுவர்கள் 11பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று புதன்கிழமை காலை முன்பள்ளிச் சிறுவர்களை அதிகளவில் ஏற்றிக்கொண்டு பயணித்த முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம்...

விபத்துக்களில் சிக்கி மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கேட்டுக்கொண்டார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம் பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், திடீரென ஏற்படும்...

மருதங்கேணி விவகாரம் குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மேலும் சில உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோரே விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்க்கு வருமாறு பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது.

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை கையளித்தனர். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து நேற்று (13) காலை கலந்துரையாடினர்....

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மோட்டார் சைக்கிள்...

தனியார் துறையினரால் சுமார் 8 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அச்சடிக்கும் இயந்திரங்களின் திறன் குறைபாடு காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான...

All posts loaded
No more posts