Ad Widget

‘சட்டத்தை மீறியது பொலிசாரே’… முன்னணியினர் வாதம்: கைதான இருவருக்கும் பிணை!

மருதங்கேணியில் பொலிசார் துப்பாக்கி முனையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை அச்சுறுத்திய விவகாரத்தில் விளக்மறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (7) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டஆலோசகர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்ச நீதிமன்றம் இருவரையும் பிணையில் விடுவித்தது.

அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அடம்பிடித்த பொலிசாருடனான சச்சரவை ஒளிப்படம் பிடித்த, பொலிசார் துப்பாக்கியை நீட்டி மிரட்டியதை கண்ட இருவரே பொலிசாரால் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் சட்டத்தை மீறியது பொலிசாரே தவிர, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோ அல்லவென்பதை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.

Related Posts