Ad Widget

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவரை அழைத்து வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்படக்கூடாது என சபாநாயகர் என்ற ரீதிதில் பொலிஸாரிடம் இதனை தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பொலிஸாரின் கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related Posts