விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது தாக்குதல்

கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போரின் போது தமது கணவன்மாரை பறிகொடுத்த நான்கு விதவைப் பெண்கள் தமது...

யாழில் உறவினரிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்த காதல் ஜோடி – காதலன் பலி

கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு, அவரது 21 வயதான காதலி உயிர்தப்பியுள்ளார். திங்கட்கிழமை (11) மாலை வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், உறவினர்களால் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...
Ad Widget

முடி வெட்டச் சொன்ன ஆசிரியரை விக்கெட் பொல்லால் சரமாரியாக தாக்கிய மாணவன்

காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், ஆசிரியரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரான அவர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே...

பொலிஸாரின் அசண்டையீனத்தால் 4 நாள்கள் வைத்தியசாலையில் காத்திருந்த சடலம்!

முல்லைத்தீவுப் பொலிஸாரின் அசண்டையீனத்தால் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் சடலம் கடந்த நான்கு நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

பேஸ்புக் காதலால் நகைகளை இழந்த பெண்

முகப்புத்தகத்தால் ஏற்பட்ட காதலால் நபர் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (03) தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் முகப்பபுத்தகத்தில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக்கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும்,தான்...

பஸ்களுக்கு இரும்பு வலை

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளுக்கு இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன. பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களிலிருந்து பஸ்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், இலங்கை போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய சேவைக்குச் சொந்தமான 57 பஸ்கள் மீது கல், போத்தல் மற்றும் இதர பொருட்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

யாழில் பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியவர் கைது!

பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறையில் புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை தனது கைத்தொலைபேசியில் உள்ள 'வைபர்' மூலம் அதே பகுதியில் வசிக்கும்...

உள்ளாடைகளை களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் இடமில்லை! மைத்திரி

இந்நாட்டின் கலாசாரம், நாகரிக வளர்ச்சியைச் சீரழிக்கும் வகையில், வெளிநாட்டுப் பாடகர்களை வரவழைத்து அநாகரிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். உள்ளாடைகளைக் களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு, இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி...

கதிர்காமத்தில் யாத்திரிகர்களிடம் வியாபாரிகள் பகற்கொள்ளை!

நீண்ட விடுமுறை காலமாக கதிர்காமத்தில் என்றுமில்லாத அளவுக்கு யாத்திரிகர்கள் குவிந்துள்ளதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் தமது இஷ்டம்போல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர். சாதாரண அப்பம் 40 ரூபா (அரசாங்கம் நிர்ணயித்துள்ள உச்சபட்ச விலை 10 ரூபா) பிளேன்டீ 50 ரூபா, கருவாட்டுடன் கூடிய சாதாரண சாப்பாட்டுப் பார்சல் 250 ரூபா, ஓர் அங்குள உயரம்கொண்ட தயிருடனான...

சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள்

இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின்...

செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஜோடிகள் சந்திப்பதற்கு தடை

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது. புனிதமான இந்தப்...

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கின்றார்

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

வியாபார நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக...

உலக்கையால் அடி வாங்கிய பொலிஸார்!

உங்கள் வீட்டுக்கருகில் எவ்வாறு கசிப்பு போத்தல்கள் வந்தது என்று வினவிய இரண்டு பொலிஸாரை உலக்கையால் தாக்கிய சம்பவம், வடமராட்சி, துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. துன்னாலைப் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வதற்காக, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸார், குறித்த பகுதிக்குச்...

வைத்தியதிகாரியின் அலட்சிய பதில் : வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல்!!

மழை என்றால் நுளம்பு வரும் தானே' என்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி அலட்சியமாக பதிலளித்து, வைத்தியசாலைக்கு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால் சிவப்பு அறிவித்தல் ஒட்டவைத்துள்ளார். இது பற்றித் தெரியவருவதாவது, கோப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர், அச்சுவேலி பொலிஸார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அச்சுவேலி நகரப் பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையில்...

இடது மார்பகத்திற்கு பதிலாக, வலது மார்பகத்தில் சத்திரசிகிச்சை

தனது மனைவியின் இடது மார்பகத்தில் இருந்த பருவை சத்திரசிகிச்சையின் மூலமாக அகற்றாமல், வலது மார்பைச் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியருக்கு எதிராக, அப்பெண்ணின் கணவன், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். களுத்துறை அகலவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரே, அகலவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னுடைய தவறை உணர்ந்த அந்த வைத்தியர், மீண்டுமொரு சத்திரசிகிச்சையை மேற்கொண்டு, தனது மனைவியின்...

கைத்தொலைபேசிக்காக மாணவர்களை அடியாட்களாக்கிய அதிபர்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் (இலக்கம் 2) அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பு மாணவர்களை கடுமையாகத் தாக்கி விசாரணைக்கு உட்படுத்தியதில் தாக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மேற்குறித்த பாடசாலையின் அதிபரின் ஐம்பதாயிரம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை காணவில்லை என தெரிவித்து சந்தேகம் என்ற...

பில்லி, சூனியம் செய்தவர் விளக்கமறியலில்

பில்லி, சூனியம் வைப்பதாகக் கூறி பொதுமக்களிடம் பெருமளவு பணத்தை பெற்று வந்தவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை புதன்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார். பில்லி, சூனியம் மீது நம்பிக்கையுடையவர்கள் குறித்த நபரிடம் சென்றால் அவர்களிடமிருந்து சிறிய தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு மருந்து ஒன்றை வழங்குவதாகவும் அந்த...

மதுபானம் வழங்க மறுத்த அரசியல் கைதியின் மோட்டார் சைக்கிள், பணம் பொலிஸாரால் பறிமுதல்!

மதுபானம் வழங்காதால் அரசியல் கைதி ஒருவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டு அவரது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று சாவகச்சேரி வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி வடக்கு, டச்சு வீதியில் வசித்த சுப்பிரமணியம் நிதிகேசன் என்பவர் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து மகளின் மருத்துவத் தேவைக்காக விடுமுறையில் வீடு வந்துள்ளார். முன்னாள் போராளியான அவர், 2014ஆம்...

யாழ். பல்கலை மாணவன் தற்கொலை! : பகிடிவதை காரணமா??

யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்ற 21 வயதுடைய தவராசா குபேரன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான...
Loading posts...

All posts loaded

No more posts