சீதனக் கொடுமையினால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் சீதன வன்கொடுமையால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் இன்னும் சில நாட்களில் திருமணத்துக்குத் தயாராக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே கேட்ட சீதனத்திற்கு மேலதிகமாகக் கேட்டமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் தந்தையை இழந்த குறித்த பெண்ணின் இந்த...

வடமராட்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் உடுத்துறைப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு இலக்கான இருவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவந்துள்ளது. நேற்று நள்ளிரவு வேளையில் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் இதனை அறிந்த...
Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலை குப்பை தொட்டிகளை திருடியது மாநகரசபை!

டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்...

புத்தளத்துக்கு வந்த இரட்டைத் தலை பாம்பு!

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பங்கதெனியப் பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து இரட்டைத் தலையுடன் கூடிய பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த பாம்பு ”இரத்த மாம்பிலை”என்று இனங்காணப்பட்டுள்ளதுடன் ஆறு அடி நீளம் உடையது என தெரிவிக்கப்படுகின்றது. பிடிக்கப்பட்ட இந்த இரட்டைத் தலை பாம்பை தெஹிவளை மிருக காட்சிசாலைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் யாழில் மீட்பு

மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் ஒருவர், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வீசியெறிப்பட்டுள்ளார். 17 வயது நிரம்பிய குறித்த பிக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த தேரர் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தேரர் ஆடைகள் எதுவுமின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில்,...

வவுனியாவில் கொடூரம்: சிறுவன் மீது சித்திரவதை!

வவுனியா - குருமன்காடு பகுதியில், தந்தை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த நிலையில் தாயுடன் வசித்த நான்கு வயதுச் சிறுவன், அப்பெண்ணின் இரண்டாவது கணவனால் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளான். இந்தச் சிறுவனைப் பார்க்க அவனது தந்தை, (தனது மனைவியின் முன்னாள் கணவன்) ஞாபகம் வருவதாகக் கூறியே அவன் சிறுவனைத் தாக்கியுள்ளான். தற்போது...

சாவகச்சேரியில் கடனை வசூலிக்கச் சென்றவர்களால் குழப்பம்

யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் கடனை வசூலிக்க நேற்றிரவு, வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில், சாவகச்சேரி , கிராம்புவில் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கடனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாவை...

காணாமல் போனோரின் உறவினர் முன்னிலையில் கண்கலங்கிய இராணுவத்தளபதி

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு வழிபட்டுள்ளனர். இந்நிலையில் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தளபதி ஒருவர் ஆலய வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்தார். இதன் போது காணாமல் போனோரின்...

பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!

வவுனியா, குருமன்காடு சந்திப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டர் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற காட்சி அருகிலிருந்த வர்த்தக நிலையத்தின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குருமன்காடு சந்திப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகமொன்றுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது மோட்டார்...

அம்­மாச்சி உணவகத்திற்கு சிங்களப் பெயர் வைக்குமாறு அழுத்தம்!

வடக்கில் உள்ள அம்­மாச்சி உணவகங்களுக்கு சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் என்ற பெயரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டு, மிகப் பிரபலமாகியுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதுபோன்ற உணவகங்களைத் திறப்பதற்கு...

யாழ்.நல்­லூ­ரி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்­குச் சென்ற பாத­யாத்­தி­ரைக் குழு­வுக்கு பொலி­ஸா­ரால் இடை­யூறு!

நல்­லூ­ரி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு யாத்­திரை சென்ற பக்­தர்­க­ளுக்­குப் பொலி­ஸா­ரால் இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் கண்­ட­னம் தெரி­வித்­தும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி­யும் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் உள்­ளிட்ட12 தரப்­பி­ன­ருக்கு இந்து சம­யத் தொண்­டர் சபை கடி­தம் அனுப்­பி­யுள்­ளது. அந்­தக் கடி­தத்­தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­தி­லி­ருந்து கடந்த ஏப்­ரல் மாதம் 20...

யாழ். நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம்

யாழ். நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ள சம்பவம், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்.பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ். நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றிலுள்ள கூண்டில் இடவசதி இல்லாத காரணத்தால் அதற்கருகில் கதிரையொன்றில் அமர்த்தப்பட்டிருந்தார். இதன்போது, நீதிமன்றிற்கு வந்திருந்த...

குடிநீர் போத்தலினுள் மருந்து கலந்து மாணவியை கொலை செய்ய முயற்சி?

குடிநீர் போத்தலினுள் ஒருவகை மருந்துப்பொருள் கலக்கப்பட்ட நிலையில், அதனை பருகிய மாணவி மயக்கமடைந்த சம்பவமொன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த குடிநீர் போத்தலினுள் ஏதேனும் மருந்துப்பொருள் கலக்கப்பட்டிருந்ததை பாடசாலை ஆசிரியர் ஒருவர் உறுதிபடுத்திய போதிலும்,...

தயாரிப்பதற்கு ஒருநாளைக்கு முன்னரே பணிஸ் விற்பனை

பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், “தயாரிக்கப்பட்ட நாளுக்கு”, முதல்நாளன்றே விற்பனை செய்யப்பட்ட சம்பவ​மொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், நுவரெலியா- பெக்கும்புர பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பணிஸ் பொதியிடப்பட்ட பக்கெற்றுகளில், உற்பத்தி செய்யப்பட்ட திகதியென 18.07.2017 திகதியிடப்பட்டுள்ளது. எனினும், அந்த பணிஸ் முதல்நாளான 17.07.2017 அன்றைய தினமே, கடைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். ​ ​பொருட்களை...

ஆசிரிய நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாதம் கடந்தும் கடமைகளை பொறுபேற்கவில்லை!

வடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக...

வங்கியில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபா மாயம்

வவுனியாவில் வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபாவை வேறு ஒருவர் கையாடல் செய்து பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா வங்கியில் கடந்த மாதம் 05 ஆம் திகதியன்று புதிய வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பித்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு...

வடமாகாண அவைத்தலைவரின் சிம்மாசனம் 90ஆயிரம் ரூபா!

வட மாகாண அவைத்தலைவருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனத் தெரியவந்துள்ளது. அண்மையில் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு சோழ மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் போன்ற ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது அச்சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனவும், கடந்த 14ஆம் நாள் அமர்வில் சி.வி.கே சிவஞானம்...

வள்ளுவர் சிலையில் இருந்த ஈழம் என்ற சொல் அழிப்பு

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை...

தரம் 7 புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனத் தாளில் அச்சடிப்பு: மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று...

யாழில் பொலிஸ் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் மீண்டும் வேலை வழங்க கோரி போராட்டத்தில்!

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றி, வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த ஒருவர் தனக்கு மீண்டும் பொலிஸ் வேலை வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபர் யாழ் கச்சேரிக்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார். அச்சுவேலியை சேர்ந்த பிரதீபன் என்பவரே தனக்கு பொலிஸ் நிலையத்தில் வேலைவேண்டும் என போராட்டத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts