Ad Widget

மதஸ்தலம் ஒன்றிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

அச்சுவேலி இராசவீதியில் அமைந்துள்ள நெசவுசாலை கட்டிடத்தினை விடுவிக்குமாறு கோரி அப் பகுதிமக்கள், மதஸ்தலம் ஒன்றிற்கு எதிராக நேற்று(10) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நெசவு சாலை யுத்தத்தின் பின் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் குறித்த கட்டிடத்தில் ஒரு மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டது பிரார்த்தணை வழிபாடுகள் முண்ணெடுகப்பட்டு வந்துள்ளது.

குறித்த் மத ஸ்தலத்தினால் சுற்றுசூழலில் அதிகளவு சத்தம் போட்டு பிரார்தணை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சிணைகளுக்கு உள்ளாகி வருகின்றார்கள். இம் மதஸ்தலத்திற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போது குறித்த மதஸ்தலம் அமைந்துள்ள நெசசாலையினை மீளவும் கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் என்றும், சுற்றுச்சூழலில் இடம்பெறும் ஒலி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்காவும் அமைந்துள்ள மதஸ்தலம் அகற்றப்படவேண்டும் என கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்திய வண்ணம் இப் போராட்டம் முன்னெடுகப்பட்டது. ‘’ பொதுச்சொத்தை தனிமனிதன் கையகப்படுத்துவதா?’’ ‘’சமயத்தின் பெயரில் சர்வதிகாரமா? அச்சுவேலி மக்களை ஏமாளியாக்காதே நெசவு நிலையத்தினை மீளவும் இயங்க வழிவிடு போன்ற வசனங்களை ஏந்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Posts