Ad Widget

பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!

வவுனியா, குருமன்காடு சந்திப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டர் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற காட்சி அருகிலிருந்த வர்த்தக நிலையத்தின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருமன்காடு சந்திப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகமொன்றுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளை குறித்த கடையின் முன்னால் நிறுத்தி விட்டு பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வர்த்தக நிலையத்திலிருந்து மீண்டும் திரும்பிய நிலையில் குறித்த இடத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

அந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவை பரிசோதித்த போது நபரொருவர் குறித்த மோட்டர் சைக்கிளை ஹெல்மட் இன்றி மன்னார் வீதி வழியாக செலுத்திச் செல்கின்றமை பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் வர்த்தக நிலையத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்த போது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர் தலைக்கவசம் அணியாது சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts