- Friday
- February 27th, 2026
யாழில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட...
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார். மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...
புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு...
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே...
வடக்கு மாகாணத்தில் 182 தொண்டர் ஆசிரியர்களை மட்டும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கு கொழும்பு கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பில் வடக்கு மாகாண சபை சீராய்வு செய்த பின்னரே அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண...
கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த பெண் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக தெரிவித்து போலி முகநூல் ஒன்றில் ஆண் உத்தியோக்தர் தகவல்களை பதிவேற்றியுள்ளார். அதில் குறித்த பெண், இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும்...
உலகின் நீளமான திருமணச்சேலை எனும் கின்னஸ் சாதனைப் புரிவதற்காக 250 பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) குறித்த திருமண வைபவம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கின்னஸ் சாதனையை இலக்காக்கொண்டு,...
கண்டியில் நேற்று நடைபெற்ற திருமணம்ஒன்றில் மணப்பெண் உலக சாதனைபடைத்துள்ளார்.மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரிபுடவையை அணிந்து சாதனையை பதிவுசெய்துள்ளார்.. நேற்று முற்பகல் இந்த தம்பதியினர்கன்னொருவ சந்திக்கு வந்த பின்னர்,கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழுமுன்னிலையில் , ஒசரி புடவையின் நீளம்அளவிடப்பட்டுள்ளது. குறித்த புடவை கண்டி கெடம்பே சந்தியில்இருந்து ஈரியகம சந்தி வரை நீளமுடையதுஎன கணக்கிடப்பட்டுள்ளது. பாரவூர்தியொன்றில் கொண்டு...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு போதைப்பொருளை எடுத்துச் சென்ற ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்த பொலிஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரிடம் 170 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக...
பாம்புக் கடிக்கு இலக்காகிய ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தன்னைத் தீண்டிய பாம்பை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு எடுத்துவந்த சில நிமிடத்தில் அந்தப் பாம்பு போத்தலுக்குள் 10 குட்டிகளைப் போட்டதால் வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்று முன்தினம் ஒருவருக்குப் பாம்பு தீண்டியுள்ளது அவர் சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம்...
யாழ்.நகர்ப் பகுதியில் உள்ள சில கரையூர் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் மலத்தொற்று கிருமி கலந்துள்ளதால் 100 இற்கு மேற்பட்ட கிணறுகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈகோலி என்னும் மலத்தொற்று கிருமி கிணறுகளில் கலந்துள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குருநகர் பாசையூர் கொட்டடி நாவாந்துறை போன்ற கரையூர் பிரதேச மக்கள் குடிதண்ணீர்...
தமிழ்மக்களின் விடிவிற்காய் உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்ட தியாகி திலீபனின் நினைவுதினம் நேற்று (15-09-2017) அவர் உயிர்நீத்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இடம்பெறும் அதே நேரத்தில் தூபிக்கு முன்னதாக நிதிநிறுவனமொன்று இந்த நிகழ்வை குழப்பும் வகையில் பாரிய சத்தத்துடன் பாடல்களையும் இசையையும் ஒலிபரப்பி இடையூறு விளைவித்துள்ளது....
பெண்ணொருவர், தனது நான்கு வயது மகளுக்கு பிரிட்டோன் மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்தை மாற்றிக்கொடுத்ததால், அச்சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் கட்டைப்பரிச்சானை சேர்ந்த சிவகாந்தன் பிறெஸமி (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு தடிமல் ஏற்பட்டமையால், அவரது தாய், பிரிட்டோன் மருந்தை பருகக் கொடுத்துள்ளார்....
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வாகன எரியூட்டல் தொழில்நுட்பத்தை தற்பொழுது வடபிராந்திய பேருந்து ஊழியர்களும் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் குறைந்த செலவில் அதிக இலாபத்தினைப் பெறமுடிவதாக சம்மந்தப்பட்ட பேருந்து உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தனியார் போக்குவரத்துத் துறையில் காணப்படும் போட்டித்தன்மைகளாலும் எரிபொருள் விலையேற்றங்களினாலும் குறுந்தூர மற்றும் நெடுந்தூர பேருந்து உரிமையாளர்கள்...
வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்று சம்பள முரண்பாட்டினைச் சரி செய்யத் தவறியமை, 2015 ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை மற்றும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடமாகாண பிராந்திய முகாமையாளர் அலுவலத்தில் நேற்று (13) நண்பகல் 12.00 மணியளவில் கற்பூரம் கொழுத்தியும் தேங்காய் உடைத்தும்...
எம்மால் யாழ் பல்கலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையானது ஊடகங்கள் வாயிலாக எமக்கு அறியக்கிடைத்தது. அவ்வறிக்கையில் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் உள்ளன. அவற்றை நாம் மறுக்கின்றோம். எமது போராட்டம் தொடர்பில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். நிர்வாக உத்தியோகத்தர்கள் அவ்விடயங்கள்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை (08.09.2017) தொடக்கம் வேலைப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியமானது பின்வருவனவற்றை அறிக்கையிட விரும்புகின்றது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட எமது பல்கலைக்கழகமானது இன்றுவரை பல்வேறு நெருக்கடிகளையும் எதிர் கொண்டு இயங்கி வருகின்றது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று...
தொண்டைமானாறு அக்கரை பகுதியில், மது பாவனைக்குத் தடை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருப்பினும் இரவு நேரங்களில் மதுவிருந்து தாராளமாக இடம்பெறுவதாக அப்பகுதி மகளிர் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இரவு நேரங்களில், ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வரும் இளஞர்கள் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதால், அப்பகுதியில் வாழும் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. அக்கரை...
யாழ். சர்வதேச திரைப்பட விழா, தியாகி திலீபனின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழா தொடர்பில், குறித்த கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் உரிமைக்காக திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய...
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து தம்மிடம் ஒப்படைக்குமாறுகோரி அவர்களது உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வீதியில் தொடர்ந்து நடத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆலய வீதியை போராட்டம் நடத்த வழங்க முடியாதுள்ளதாகவும் அதற்கான காரணத்தையும் நிர்வாக சபையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்றுக் கடிதம் மூலம் அறிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி...
Loading posts...
All posts loaded
No more posts
