ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை!! பிள்ளைகளிடம் ஜனாதிபதி உறுதி!!!

அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவரது இரண்டு பிள்ளைகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை ஆனந்தசுதாகரின் புதல்வனும் புதல்வியும் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

கோட்டாபய கொலைகளைச் செய்தார் என்பது உறுதி! – விரைவில் உண்மைகள் வெளிவரும்

குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்க பாரபட்சம் வழங்கவோ அல்லது காப்பாற்றவோ மாட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக்...
Ad Widget

சுதாகரனின் விடுதலைக்காக தலைநகரில் திரண்ட மக்கள்!

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது. நேற்று (புதன்கிழமை) நவோதயா அமைப்பின் ஏற்பாட்டில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால், இனம், மதம், மொழிகளை கடந்து திரண்ட மக்கள் ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, ஜனாதிபதிக்கு கருணை மனு...

ஈபிடிபியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டதாகவே அமையும் -வடக்கு முதலமைச்சர்

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டால், அது பதவிகளுக்காக – சுயநலங்களுக்காக கொள்கைகளைக் கைவிட்டதாகவே கருதப்படும்” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் நேற்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த...

தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் ஒருங்கிணைவு தமிழ்த் தேசத்திற்கு ஆபத்தானது

நேற்றயதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுப்பிவைக்கப்பட் செய்தியறிக்கை... தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை நாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய தினமும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி...

யாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு!

யாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் றெமீடியஸும் மேயர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது. இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா இல்லை பகிரங்க வாக்கெடுப்பு...

யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு ஆரம்பம்!

யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ள அமர்வின் முதல் அங்கமாக மாநகர மேயர் மற்றும் துணை மேயர் தெரிவுகள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி...

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஐ.ஓ.சி. 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும்,...

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின்போது நடந்தது என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமால் ஆக்கப்பட்டோரது உறவினர்களை சந்தித்ததாக வெளியான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்தி உண்மைக்கு புறம்பானது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

எமது அரசியல்வாதிகள் பலருக்கு அவர்களுடைய பை நிறைய பணம் கிடைத்தால் போதும்!-முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்

அனைத்து உரிமைகளையும் தம் கைக்குள் மூடி மறைத்துக் கொண்டு நல்லிணக்கம் குறித்து பேசுவோரின் பொறிக்குள் சிக்கினால் எதிர்வரும் பத்தாண்டுக்குள் வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும் என, வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் பொருளாதார விருத்தி குறித்து எழுப்பப்பட்ட வாரமொரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும்...

“அப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி” ஜனாதிபதியின் மகளுக்கு அரசியல் கைதியின் மகள் கடிதம்!!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 15-03-2018 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று புதன்கிழமை (21.03.2018) மாலை 4 மணியளவில் தியாகி திலீபனின் நினைவுத் தூபிமுன் இடம்பெற்ற வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில்...

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள் ஐனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குடும்ப நிலையையும் குறிப்பாக அவருடைய சிறிய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஐனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த சுதாகரன் கடந்த 2008 ம் ஆண்டு தொடக்கம் அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில...

தந்தையை விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்!

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுதலை செய்யுமாறு அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றினை நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்தவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் அவர்களின் மனைவியின் இறுதிக் கிரியை கடந்த 18ம்...

செய்ந்நன்றியை மறக்கவில்லை என்று சொல்லும் ஜனாதிபதி அதற்கான பிரதியுபகாரங்களை இதுவரையில் செய்யவேயில்லை : பொ.ஐங்கரநேசன்

தமிழ்மக்கள் தனக்குச்செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவில்லை என்றும் அதன்காரணமாகவே தமிழர் பிரதேசங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொள்வதாகவும் நேற்றையதினம் (19-03-2018) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது உரையின்போது தெரிவித்திருக்கிறார். ஆனால், தமிழ்மக்களின் செய்ந்நன்றியை மறக்கவில்லை என்று சொல்லும் ஜனாதிபதி அவர்கள் அதற்கான பிரதியுபகாரங்களை இதுவரையில் தமிழ்மக்களுக்குச் செய்யவேயில்லை. அவரது வருகை மட்டுமே...

காணமால் ஆக்கப்பட்ட அதிபர் தொடர்பில் கேட்காது , நீச்சல் தடாகம் கேட்டது மனவேதனையாக உள்ளது!!

காணாமல் ஆக்கப்பட்ட எமது கல்லூரி அதிபர் தொடர்பில் கேட்காது கல்லூரிக்கு நீச்சல் தடாகம் அமைத்து தருமாறு கல்லூரி நிர்வாகம் கோரியது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக போராடத்தில் ஈடுபட்ட புனித பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட...

வேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் வேலை வழங்க திட்டம் : யாழில் ஜனாதிபதி

இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினைநேற்று (19) திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை அனைவரும் அறிந்ததே. நாட்டில்...

ஜனாதிபதியின் செயலால் தொடர் ஏமாற்றத்துடன் யாழ். உறவுகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி வந்திருந்த நிலையில், அவரின் வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ். விஜயம் செய்த ஜனாதிபதி, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சார்பில்...

தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல முயற்சித்த மகள் : தாயாரின் இறுதிச் சடங்கில் நெகிழ்ச்சித் தருணம்!

தாயாரின் இறுதிச் சடங்கிற்கு அழைத்துவரப்பட்டிருந்த அரசியல் கைதியான தனது தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல மகள் முயற்சித்தமையானது அனைவரது மனதையும் நெகிழவைத்துள்ளது. சுகயீனம் காரணமாக கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்த ஆனந்தசுதாகர் யோகராணியின் இறுதிச் சடங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மருதநகரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் மனையிவியின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்வதற்காக ...

இராணுவத்தின் பிக்கப் மோதி ஒருவர் பலி!!

பளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்....
Loading posts...

All posts loaded

No more posts