2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல்

2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றம் உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவார்கள் என வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியானது. நாடாளுமன்றம் உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும். அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான...

முல்லையில் குளம் உடைத்ததால் காணாமற்போன 6 பேர் பத்திரமாக மீட்பு

தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்தில் காணாமற்போன 6 பேர் விமானப் படையினரால் இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானப்படையின் எம்17 உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டனர் என்று விமானப் படையினர் தெரிவித்தனர். நித்தகைக்குளம் மற்றும் அதனோடு...
Ad Widget

யாழில் 12 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம் – 19 வயது இளைஞன் கைது!

யாழ். பருத்தித்துறையில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு காலை சிறுமி சென்ற நிலையில் மாலை சிறுமி வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்...

கூட்டமைப்பிலிருந்து சிலரை எங்கள் பக்கம் கொண்டு வருவோம்: எஸ்.பி. திஸாநாயக்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...

என்னை சீண்டினால் பல துடுப்புச்சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும்! : மைத்திரி எச்சரிக்கை

தற்போது நான் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் என்னை எவரும் சீண்டினால் பல துடுப்புச்சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும். இதனால் வித்தியாசமான விபரீதங்களை சந்திக்கவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில்...

கூட்­டாட்சி மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பன நான் உயி­ரோடு இருக்­கும் வரை­யில் நடக்­காது என்று ஒரு­போ­தும் கூற­வில்லை – ஜனாதிபதி

கூட்­டாட்சி அர­ச­மைப்பு மற்­றும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பன நான் உயி­ரோடு இருக்­கும் வரை­யில் நடக்­காது என்று ஒரு­போ­தும் கூற­வில்லை. நான் அவ்­வாறு தெரி­விக்­க­வில்லை என்­பதைப் பொது மேடை­யில் விரை­வில் அறி­விப்­பேன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­டம் தெரி­வித்­துள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடை­யில்...

தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்க முடியாது ரணிலும் தெரிவிப்பு!

வடக்கு – கிழக்கு இணைப்பை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். வடக்கையும் கிழக்கையும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென ஜனாதிபதி...

தமிழ் மக்களுக்கு உரிமைகள் தேவைதானா?- முத்தையா முரளிதரன்

“நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். எனவே இது சிங்களவர்களுக்குரிய நாடுதான். தமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகம் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசி வருகின்றனர். உண்மையில் தமிழ் மக்களுக்கு அடிபடையாக அவை தேவைதானா என கேள்வியெழுப்ப விரும்புகிறேன்” இவ்வாறு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பிபிசியின் சிங்கள சேவை...

உயரிய விருதை ஜனாதிபதியிடம் திருப்பிக்கொடுத்த தமிழ் மகன்!

ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் யாழ் மாவட்ட அரசஅதிபர் கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு பகிரங்கக்...

நாடாளுமன்றம் கலைக்கப்படாது – அரசாங்க தகவல் திணைக்களம்!

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் நேற்று (புதன்கிழமை) கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம் ஏ.சுமந்திரன்...

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்க மகிந்­த­வு­டன் இணைந்து செயற்­ப­டு­வேன் – மைத்­தி­ரி­பால சிறி­சேன

வடக்கு மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க புதிய தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்­ச­வும் நானும் முழு­மை­யான அர்ப்­ ­பணிப்­பு­டன் செயற்­ப­டு­வோம் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார். மைத்­திரி – மகிந்த அணி இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த மக்­கள் பலம் போராட்­டம் கொழும்பு நாடா­ளு­மன்ற சுற்­று­வட்­டத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு...

அடுத்த தீபா­வ­ளிக்­கா­வது ஒரு தீர்வு வந்து சேரட்­டும் – இரா. சம்­பந்­தன்

2019ஆம் ஆண்டு வரும் தீபா­வ­ளிக்­குள்­ளா­வது தமி­ழர்­க­ளுக்­கான நிரந்­தர தீர்வு பெற்­றுக் கொடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்­தன் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் கோரிக்கை விடுத்­தார். கடந்த 2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்­டு­க­ளி­லும் தீபா­வ­ளிக்­குள் தீர்வு வரும், வர­வேண்­டும் என்று சம்­பந்­தன் தெரித்­தி­ருந்த நிலை­யில் இந்த ஆண்­டும் அவர் மைத்­தி­யி­டம் இந்­தக்...

கூட்டமைப்புக்கு வியாழேந்திரன் சவால்!

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,...

இரத்தக்களறி ஏற்படும் அபாயம்!! – ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏஎவ்பிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் இரத்தக்களறியொன்றை தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அதேவேளை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....

கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி

பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B. நவீன்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை...

இணைந்த வடகிழக்கில் சமஷ்டித் தீர்வு நான் உயிருடன் இருக்கும்வரை இல்லை – மைத்திரி ஆவேசம்

“நான் இந்தக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கை இணைக்கவிடமாட்டேன். சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன். இவற்றைச் செய்யவேண்டுமாயின் என்னைக் கொல்லவேண்டும்” இவ்வாறு கடும்தொனியில் தெரிவித்தார் மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தத் தகவலை லங்கா தீப இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்த...

வல்லரசுகளின் தாளத்தில் கூட்டமைப்பு ஆடுகின்றது! : கஜேந்திரகுமார்

பிரதமர் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்...

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து சுரேஷ், சித்தர் கட்சிகளை அகற்றவேண்டும் – விக்னேஸ்வரனுக்கு முன்னணி கடிதம்

“தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு ஈபிஆர்எல்எப் மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளையும் பேரவையிலிருந்து அகற்றவேண்டும்” என்று வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரவையின் வடக்கு இணைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது. இந்த தகவலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டார். யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள...

போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவரிடம் ஆட்சிப் பொறுப்பு – மைத்திரி மீது சமந்தா பவர் கடும் சாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்” என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது கீச்சகப் பக்கத்தில் சமந்தா பவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர், பொறுப்புக்கூறலுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts