- Wednesday
- December 24th, 2025
பருத்தித்துறை சுப்பர்மடத்தில் நேற்று மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்து, படைத்தரப்பின் அச்சுறுத்தலையும் கணக்கிலெடுக்காமல் அஞ்சலி நிகழ்வை நடத்தியவரது வீடு நள்ளிரவில் தாக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அவரது வீட்டுக்கு சென்ற இனம்தெரியாத நபர்கள், வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளனர். நேற்று (27) பருத்தித்துறை சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்தின நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதையறிந்த பருத்தித்துறை பொலிசார் அங்கு சென்று...
அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும்...
இம்முறை மாவீரர்தினத்தில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், கொடி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கிலும், கிழக்கிலுமாக இரண்டு இடங்களில் புலிக்கொடி பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு அருகில் இனம்தெரியாதவர்கள் புலிக்கொடியை பறக்க விட்டிருந்தனர். மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்த மின்கம்பத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. சம்பவத்தை அறிந்த புதுக்குடியிருப்பு...
ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள். ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்தநாளை நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலைமையிலையே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக்...
வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு யாழ்.மாவட்டத்தில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும்சேவை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ். மாவட்ட அரச...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி கோப்பாயில் நடைபெறவிருந்த மாவீரர் நிகழ்வில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பனவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்...
யாழில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளதாவது, “கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது...
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...
“தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை...
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மாறிய அரசாங்கங்களால் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட...
“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக...
நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென்றால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்திய கடதாசிகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதாயின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஒருவரின் பெயரினை முன்மொழியுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை...
நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினருக்கு மத்தியில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட சந்திப்பொன்றை நடத்தினார். அதன் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நாடாளுமன்றை ஒத்திவைப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பிற்கும் இடையில் அமளி துமளி ஏற்பட்ட...
ஐக்கிய தேசியக் கட்சி அரசை அமைத்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் என ரணில்விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்”...
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தொடர்ந்தும் தன்னால் பணியாற்ற முடியாது என்பதால், அது சம்பந்தமாக சிந்தித்து பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை...
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், அரசியலமைப்புக்குட்பட்டதெனத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் படியே பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார். அரசியலமைப்பின் 19 வது திருத்த சட்டத்தின் 33...
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி களமிறங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளதுடன் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது புதிய கட்சி தொடர்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே இந்த...
மத்திய வங்காள விரிகுடா பகுதியில் காணப்படும் தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி காங்கேசன்துறையில் இருந்து ஆயிரத்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளது. இந்த சூறாவளி “கஜா” என பெயரிடப்பட்டுள்ள இச் சூறாவளி எதிர்வரும் 24 மணித்தியாலங்களுள் மேற்கில் வலுவடைந்து வடமேல் திசையில் பயணிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன்...
தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் ஜனாதிபதி மக்கள் முன் உரையாற்றும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். அந்தவகையில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணத்தை ஜனாதிபதி விளக்கியுள்ளார். “2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள்,...
Loading posts...
All posts loaded
No more posts
