நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபு ஆபத்தானது!!

நாட்டில் பரவி வரும் கோவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு மிகவும் கடுமையானது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த டெல்டா திரிபு 15 வினாடிகளுக்குள் பலருக்கு பரவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். முன்னதாக நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவிய கோரோனா வைரஸ் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் மற்றவர்களுக்கு பரவியதாக சுகாதார...

கொரோனாவால் மேலும் 63 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 420 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 27 பெண்களும் 36 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து...
Ad Widget

இலங்கை மிக மோசமான டெல்டா அலையின் விளிம்பில்! – 2 டோஸ் தடுப்பூசி கூட போதாது என எச்சரிக்கும் பேராசிரியர்

இலங்கை மிகவும் மோசமான டெல்டா அலையின் விளிம்பில் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொடர்பில் ஆராயும் விசேட நிபுணர், பேராசிரியர் மலித் பீரிஸ் தெரிவித்துள்ளார். இணையம் ஊடாக நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய டெல்டா திரிபு தெற்காசிய பிராந்தியம் உட்பட உலகளவில் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் மலித் பீரிஸ்...

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சண்டிலிப்பாய்,மாசியப்பிட்டியைச் சேர்ந்த (67 வயது) பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மேலும் 66 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து...

தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர் கோவிட்-19 நோயினால் சாவு

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது -44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி...

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் செய்ய வேண்டியது இது தான்!

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ்...

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது – மேலும் 63 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 2 இலட்சத்து 71...

அண்மைய நாள்களில் கோவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அண்மைய நாள்களில் கோவிட்-19 தொற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகமாக அடையாளம் காணப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அதன்படி, சிகிச்சைப் பிரிவுகளில் ஒக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட இடம் இப்போது நிறைவடைந்துள்ளதாக பல மருத்துவமனைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர்...

யாழ் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் மாற்றம் குறித்து பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்!

யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபரை பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். யாழ் மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை...

வல்வெட்டித்துறையில் 16 பேருக்கு கொரோனா!

வல்வெட்டித்துறையில் நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதி முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியிலுள்ள 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ்...

இலங்கை மீண்டும் கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகர்கின்றது!!

இலங்கை கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகளவு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மரணித்தும் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அசேல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, ”நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றமையை...

வார இறுதி விடுமுறை நாள்களில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் திட்டமில்லை

வார இறுதி நாள்களில் நீண்ட விடுமுறை உள்ள போதிலும் நாட்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த திட்டமும் இல்லை என்று கோவிட்- 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள மாகாண பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே இன்னும் நடைமுறையில் உள்ளன என்று...

வல்வெட்டித்துறையில் மற்றொரு கிராமத்திலும் தொற்றாளார்கள் அடையாளம்!!

வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராரத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீருவில் கிராமத்தில் நேற்று எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 13 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவலடி மற்றும் தீருவில் ஆகிய...

அடுத்த சில நாள்களில் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக டெல்டா திரிபு மாறும் – பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை

கோவிட்-19 வைரஸ் டெல்டா திரிபு அடுத்த சில நாள்களில் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் ஊடகத் தலைவர் உபுல் ரோஹானா தெரிவித்ததாவது; அரசும் பொதுமக்களும் நிலமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளத் தவறினால் நாடு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளும். உலகெங்கிலும் உள்ள போக்கைக் கண்டுகொள்ளலாம். இலங்கை...

யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, வண்ணார்பண்ணையைச் சேர்ந்த (63 வயது) பெண் ஒருவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

யாழ். உள்ளிட்ட நாட்டின் பல இடங்களுக்கும் பரவிய டெல்டா!

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பிலியந்தலையைச் 22 வயதான ஆணொருவரும் இவர்களில்...

வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தல்

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. அதனையடுத்து பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிபாளருக்கும் நேற்றிரவு முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமைய உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு (J388)...

பருத்தித்துறை பொதுச் சந்தை வியாபாரிகள் மூவர் உள்பட ஐவருக்கு கோரோனா தொற்று

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய சந்தை மேற்கு பகுதியில் சந்தேகத்துக்கு இடமானோரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அதனால் பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது...
Loading posts...

All posts loaded

No more posts