நாட்டை முடக்குவது குறித்த மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்ப்பு!!

ஒருவார காலத்துக்கேனும் நாட்டை முடக்கி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தபாய செவி சாய்த்துள்ளார். கொவிட்-19 தடுப்பூ பணிக்குழுவின் கூட்டதிற்கு பின்னர், அது குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நாட்டை முடக்குவது தொடர்பான...

யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டார் மாவட்ட அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட...
Ad Widget

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்!! மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக 3 ஆயிரத்து 806 பேருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 3 ஆயிரத்து 793 பேர்,...

யாழில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில், இராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்...

நாட்டை முடக்க முடியாது!! ஜனாதிபதி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது என்றும், அன்றாடம் வாழ்க்கை நடத்துபவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்....

இலங்கையில் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. SA 222 – V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவை டெல்டா வகையின் கூர்மையான பிறழ்வுகள் என்றும் இலங்கையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக...

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (65 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பருத்தித்துறை- தும்பளையைச் சேர்ந்த (39 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதேவேளை பருத்தித்துறை- இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த...

வடக்கிலும் கொரோனாத் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம் இன்றுமுதல் ஆரம்பம்!!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது - கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது....

யாழ்ப்பாணத்தில் இராணுவம் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் திடீரென நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் பிருந்தாபன் பொன்ராசா கூறியுள்ளதாவது, “நேற்று நள்ளிரவு 11 மணியளவில், இராணுவ இலக்க தகடுகள் பொருத்திய மோட்டார் சைக்கிளில் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 10க்கும்...

முக்கிய அமைச்சு பதவிகளில் ஏற்பட்ட மாற்றம்!!

தற்போதுள்ள அமைச்சரவை அமைச்ச பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இது தொடர்பில் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதாரத் துறை அமைச்சராகவும், பவித்ரா போக்குவரத்து அமைச்சராகவும், காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தினேஸ் குணவர்த்தன கல்வி...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது – புதிதாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாட்டில் மேலும் 161 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...

கொரோனா வைரஸினால் மேலும் 124 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 987 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில். இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 75 ஆண்களும் 49 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

கோவிட்-19 வைரஸின் ‘எப்சிலான்’ திரிபு பாகிஸ்தானில் அடையாளம் – தடுப்பூசிகளிடமும் திறனில்லை

பாகிஸ்தானில் இருந்து “எப்சிலான்” என்ற உயர் பரிமாற்ற கோவிட்-19 திரிபு பதிவாகியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சுகாதார அதிகாரிகள், கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களிடையே ‘எப்சிலான்’ வைரஸ் அடையாளம் காணப்பட்டதை வெளிப்படுத்தினர். முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்த கோவிட்-19 திரிபுகளை தடுப்பூசிகள் அடக்கும் திறன் கொண்டவை என்று இதுவரை நிபுணர்கள் காட்டியுள்ளனர். ஆனால் தடுப்பூசிகளால் இந்த...

வல்வை நகர சபைத் தலைவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது-76) கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை மந்திகை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடநிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர்...

உடனடியாக நாடு முடக்கப்பட்டாலும்கூட விதியை மாற்ற முடியாது – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ்...

கொரோனா வைரஸினால் மேலும் 111 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 953 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 111 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 56 ஆண்களும் 55 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

உடன் பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பியுங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர்

நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் அதிகரிப்பு மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரித்துள்ளனர். அதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுள்ள கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியுமான என்பது கேள்விக்குறியாகவுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலைமைகள் மற்றும் கொவிட்...

கொரோனாவால் மேலும் 94 மரணங்கள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 69 ஆண்களும் 25 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111ஆக...

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழப்பு!! நாட்டில் 94 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த (67 வயது) ஆண் ஒருவரும் புங்குடுதீவையை சேர்ந்த (71 வயது) பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை கொரோனா வைரஸ் தொற்றினால்...
Loading posts...

All posts loaded

No more posts