Ad Widget

கொரோனா நோயாளிகளினால் நிரம்பியுள்ள யாழ்.போதனா வைத்தியசாலை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 129 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 10 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், வைத்தியசாலைகளிலும் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், குறித்த வைத்தியசாலையிலுள்ள 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.

கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் தினமும் 5 சடலங்கள் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் சீரான ஒழுங்கமைப்பில் தினமும் கொரோனா நோயினால் உயிரிழந்தோரின் சடலங்கள், கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts