Ad Widget

இலங்கையில் கொரோனா இறப்பு வீதம் மிக அதிகம்!

அரசாங்கம் தினசரி வெளியிடும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று ஊடக சந்திப்பின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன, இலங்கையின் தினசரி கொரோனா வைரஸ் மரணங்கள், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முப்பது மடங்கு அதிகம் என்றார்.

சீனாவின் மக்கள் தொகை 1.43 பில்லியன். கொரோனா தொற்றினால் 4,636 பேர் மரணித்துள்ளனர். எனினும், 22 மில்லியன் மக்கள் தொகையுடைய இலங்கையில் 8,775 பேர் மரணித்ததாக கூறினார்.

இலங்கையில் ஒரு மில்லியனுக்கு ஒன்பது மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியா 0.3, பாகிஸ்தான் 0.3 மற்றும் பங்களாதேஷ் 0.7 என பதிவாகியுள்ளன.

மேலும், கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் முறை தோல்வியடைந்துள்ளது என கூறினார்.

வீதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும், பொதுமக்களின் கோரிக்கையின் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதாகவும், பூட்டுதல் விதிக்கப்பட வேண்டும் என்றால், அது சரியாக செய்யப்பட வேண்டும்என்றும் தெரிவித்தார்.

Related Posts