வல்வை ஆதிகோவிலடியில் 38 பேருக்கு கோரோனா தொற்று; இரண்டு நாள்களில் 48 பேர் கண்டறிவு

வல்வெட்டித்துறையில் நேற்று 38 பேர் உள்பட இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று...

கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை!!

இலங்கையில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முழுமையாக தயாராக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் வைரஸின் மற்றொரு அலை உருவாக வாய்ப்புள்ளது என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். இலங்கை விழிப்புடன் இருப்பதாகவும் உலக முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். வைரஸை ஒழிக்க முடியாது என்பதை...
Ad Widget

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 41 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அவர், 2019 ஆம் ஆண்டு கட்டாருக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவரை கைதுசெய்ய இன்டர்போல் நீல நோட்டீஸ் அனுப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சந்தேக நபர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு...

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்தது!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. 18 பெண்களும் 17 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது.

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு...

கொரோனா வைரஸினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 68 ஆயிரத்து 676...

மஹிந்தவின் அமைச்சு பசில் வசம்! மஹிந்தவுக்கு புதிய அமைச்சு!!

நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

காவல்துறை உத்தியோகஸ்தரின் பதிவு திருமணத்தில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர். கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்நிலையில் மாப்பிள்ளை...

பரிசோதனை வெற்றி – கொரோனாவுக்கு சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்....

இருமாதகாலத்தின் பின்னர் டெல்டா வைரசின் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2 - 3 மாதகாலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எனவே தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இருமாதகாலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...

பருத்தித்துறை நகரில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 6 பேருக்கு கோவிட்-19 தொற்று

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் ஆறு பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மந்திகை பகுதியில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் நேற்று பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு...

அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகளைக் காண வாய்ப்புள்ளது – வைத்தியர் ரவி ரன்னன் எலிய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும். இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் என்று சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர்...

யாழில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமை யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவரே நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார் இவரின் சடலம், சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளதாக...

யாழில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் : 4 பேர் படுகாயம் : சொத்துக்களுக்கு சேதம் !

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவமொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் உள்ள இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள செல்வபுரம் சிவன் கோவிலடியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

ஆபத்து நீங்கவில்லை!! ஒரு புதிய எதிரி சுற்றித்திரிகிறான் – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தாவிட்டால் இன்னும் 10 வாரங்களில் இலங்கையினுள் பரவும் பிரதான வகை கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் திரிபு மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளை இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "60 வயதிற்கு...

யாழில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு 100ஐ நெருங்கியது!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். அதேபோல், யாழ்ப்பாணம் – வெள்ளாந்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம்...

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...

டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயம் – சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை!!

நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் எனவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை...

திருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்!

பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி திருமண நிகழ்வு நடைபெற்றது. இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, அதிகளவானோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இது...

நாட்டில் மேலும் 70இற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு! 2,000இற்கு மேற்பட்டோருக்குக் தொற்று!!

நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 33 ஆண்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts