காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி படையினரால் முற்றாக இடித்தழிப்பு

வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயமென படைத்தரப்பால் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் கடந்த இரு நாட்களில் படையினரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன. (more…)

அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டின் மீது கல் வீச்சுத் தாக்குதல்

திருநெல்வேலியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலான படங்கள் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளது. இருப்பினும் எம்மால் இவை உறுதிப்படுத்த முடியவில்லை (more…)

அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட அரசுக்குப் பீதியை ஏற்படுத்தும் – விக்கினேஸ்வரன்

அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட அரசுக்குப் பீதியை ஏற்படுத்தும். இறந்தவர்கள் பேசமாட்டார்கள் என்பது முதுமொழி. இலங்கையில் இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டு பீதியை ஏற்படுத்துகின்றன என முதலமைச் விக்கினேஸ்வரன் தெரிவித்தார் . (more…)

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இல்லத்தின் மீது தாக்குதல்

சாவகச்சேரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது இன்று அதிகாலை 1.30 அளவில் ஆயுதந்தாங்கிய இனந்தெரியாத குழு ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மரம் நாட்டினார் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்!

மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்டவேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று (26-11-2013) அவர் மன்னாரில் மரங்களை நாட்டினார். (more…)

பாராளுமன்றில் மகிந்தா முன்னாடி முரளிக்கு சாரா செருப்படி

நாட்டில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விமான நிலையங்கள் அமைப்பு, துறைமுகங்கள் விரிவாக்கம்,வீதி அபிவிருத்தி, சுற்றுலா விடுதிகள் அமைப்பு என எவையும் போரினால் சிதைக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு ஆளணி மீளாய்வுக் கூட்டத்தை தன்னிச்சையாகக் கூட்டினார் ஆளுநர்!

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது. (more…)

ஜனாதிபதியின் பதாகைகளை கிழித்ததாக நால்வர் கைது, தெல்லிப்பழையில் பதற்றம்!

ஜனாதிபதியின் பதாகைகளை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு 4 இளைஞர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய விஜேநேசன் கைது!

இன்று கரவெட்டி பிரதேச சபையில் நாட்டிற்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் பிரதேச சபை உறுப்பினர்கள் . (more…)

கரவெட்டி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர்களுக்கான அஞ்சலி கரவெட்டி பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை செலுத்தப்பட்டுள்ளது. (more…)

மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்துங்கள், விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி கடிதம்

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனை உறுதிப்படுத்தும் தேவைப்பாடு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு (more…)

மீண்டும் வலி.வடக்கில் வீடுகள் இடித்தழிப்பு

வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நேற்று ஆரம்பமாகி உள்ளது. (more…)

மஹிந்த சிந்தனை’ என்ற அரசியல் நோக்கத்துக்காக செயற்பட முடியாது: முதலமைச்சர்

ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் என்பது முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டமாகும். (more…)

நானும் எனது பிள்ளைகளும் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறோம் – அனந்தி

யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

வடக்குக்கான அதிகாரத்தை அர்த்தமற்றதாக்க அரசு சதி – முதலமைச்சர்

அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். (more…)

வரவு செலவுத்திட்டம் 2014…

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது வயதில் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பித்தார். (more…)

மயிலிட்டி மக்களை சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை!

மயிலிட்டி மக்களை மாவிட்டபுரம் சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த் துவதற்குத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. (more…)

ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

யாழ். பற்றிக்ஸ் வீதியிலிருந்த ஜனாதிபதியின் பதாகை இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை எரிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts