தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்; முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பேராதனை பல்கலைக்கழகக் கல்வி பயிலும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மாணவர்கள் பலர் தமது பெற்றோருடன் என்னை...

இரணைமடு புத்த விகாரை சிங்களக் குடியேற்றத்திற்கான திட்டம்!

கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் - சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும் விளைவை கொண்டது என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார். கிளிநொச்சியின் இரணைமடு மற்றும் முறிகண்டியை...
Ad Widget

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது பொய்: இராணுவம்

இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் பொய்யான கருத்தாகும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி,...

கருணாவை தூக்கிலிடுங்கள்!! எனது உறவுகளை அவரே கொன்றார்!!

"எனது மனைவி, பிள்ளைகள், உறவினர்களைப் படுகொலைசெய்த கருணா அம்மானை உடன் கைது செய்யுங்கள். எமது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும்."- இவ்வாறு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்க செயலணி அமர்வில் காமிது லெப்பை மீராசாகிப் (வயது - 78) என்ற வயோதிபர் தெரிவித்தார். அவர்...

வடக்கின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 6000 மில்லியன் ரூபா நிதி மத்திக்கு திரும்பியுள்ளது!

நேற்றையதினம் (வியாழக்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கிளிநொச்சி மாவட்டத்துக்கு பயணம் செய்து கிளிநொச்சி பொதுச் சந்தையையும் கனகபுரத்தில் முன்னர் கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தையும் பார்வையிட்டார். இதன்பின்பு அவர் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது, நான் ஒரு அமைச்சர் கிடையாது, நான் ஒரு ஆளுநர் அதாவது ஜனாதிபதியின் ஒரு தூதுவர். இந்த வருடம்...

முல்லையில் குடும்பமொன்று உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தந்தை,தாய்,பிள்ளைகளென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று (வியாழக்கிழமை) காலை முதல் ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் ஒரு பக்கச் சார்பாக செயற்படுவதாக...

பிரிட்டன் கடலில் மூழ்கி இலங்கைத் தமிழர்கள் ஐவர் உயிரிழப்பு!

பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் சகோதரர்கள் இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்பரப்பில் உள்ள மண்திட்டியில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் கடல் அலை அள்ளிச் சென்றதாகத் தெரிவிக்கபபடுகிறது. ரவி நிதர்ஷன் (வயது 22), ஶ்ரீஸ்கந்தராஜா...

பலாலி புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட அனுமதி

பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. பலாலி வடக்கு ஜே. 254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1500 குடும்பங்கள் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த திருநாள் திருப்பலி ஆவணி மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...

யாழ் பல்கலைக்கழக மோதல் : வழக்கு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் ஒத்தி வைத்துள்ளார். கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் போது, தன்னைத் தாக்கியது பல்கலைக்கழக மாணவர்...

வடக்கில் நூதன முறையில் மோசடி. இளைஞர், யுவதிகள் அவதானம்

வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை...

இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கினார் பிரதேச செயலர்!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலர் வழங்கியுள்ளார். குறித்த காணி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட நிலையில் நேற்று நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு வந்து நில அளவீடு செய்து எல்லைக்கல் பதித்துவிட்டுச் சென்றுள்ளனர். பிரதேச செயலரின்...

14ஆம் திகதி அனைவரையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை : சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நீதியான விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம்...

உறவுகளை பறிகொடுத்த பெண்ணின் காணியை பறித்து அரச வேலைத்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அரசாங்கத்தின் சிரமசக்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றிணை அமைப்பதற்காகவே இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த காணியானது, யுத்தத்தின் போது கணவனை...

வலி.வடக்கில் 460 ஏக்கர் காணி ஒரு வாரத்திற்குள் விடுவிப்பு

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 460 ஏக்கர் பொதுமக்களின் காணியை மீள்குடியேற்றத்திற்காக விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் உறுதிசெய்தது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே மேற்படி காணி விடுவிப்பு உறுதிசெய்யப்பட்டது. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி...

கீரிமலை வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகளில் இராணுவத்துடன் முன்னாள் போராளிகள் இணைவு

இடம்பெயர்ந்து 31 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்படுள்ள 971 குடும்பங்களை மீள்குடியேற்றும் வகையில் கீரிமலைப் பகுதியில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் போராளிகள், ஈடுபட்டுள்ளனர். இச் செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இராணுவத் தளபதி லெப்டினன்...

யாழில் காவல்துறை பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு!

யாழ்ப்பாணத்தில் இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை காவல்துறையினர் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது , குறித்த ஆலயமானது...

மயிலிட்டியில் சில பகுதிகளை விடுவிக்க இணக்கம்!

மயிலிட்டிப் பிரதேசத்தில் சில பகுதிகளை விடுவிப்பதாக பலாலி இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி...

பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் திட்டமிட்டு தாக்கியதை போல் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று(திங்கட்கிழமை) இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம்...

விஷ ஊசி விவகாரம்! பரிசோதனைக்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்!

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த குழுவை நியமித்துள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சர் பீ. சத்தியலிங்கத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த...
Loading posts...

All posts loaded

No more posts