Ad Widget

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது பொய்: இராணுவம்

இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் பொய்யான கருத்தாகும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி, இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் முழுப்பொய். அதேபோல் விடுதலைப்புலி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்பதையும் உறுதியாக கூறுகின்றேன்.

மேலும், வடக்கில் இன்றும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் உள்ளன. வடக்கு கிழக்கில் மட்டுமல்ல எந்தப்பகுதியில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. வடக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ள போதிலும் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படுவதாக கூறவில்லை. அதேபோல் வடக்கில் இருந்து முகாம்களை அகற்றும் தீர்மானமும் இல்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

Related Posts