- Wednesday
- December 31st, 2025
சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.அந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இவ்வாறு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது கள்ள காதலரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.
தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உமையாள்புரம் பிள்ளையார் கோவிலிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நீதிக்கான நடை பயணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான தம்பிராஜா குருகுலராஜா, சுப்பரமணியம் பசுபதிப்பிள்ளை, தமிழ்தேசிய...
'நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாக இருந்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகுங்கள்' என வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். வசாவிளான், பலாலி தெற்கு சமூக நல அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யும் நிகழ்வு, வசாவிளான் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது....
யாழ்.குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு, துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். யாழ்.குடாநாட்டுக்கான பிரதி...
யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், மற்றும் வீட்டுப் பயனாளிகளும் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோர் மாதம் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நலன்புரி...
கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது...
விடுதலைப்புலிகள் நடாத்திய பொங்குதமிழை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடாத்த முயற்சிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சியிலும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இங்கே விடுதலைப்புலிகள் பொங்குதமிழ் நிகழ்வுகளை நடாத்தியதாகத்...
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவக்குழு முன்னாள் போராளின் உடல்நிலையைப் பரிசோதிக்க மறுத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தடுப்பு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி மற்றும் விசம் கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், 59 ஆவது வடமாகாண சபை அமர்வின்போது முன்னாள் போராளிகளின்...
யாழ்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களை யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் நீதிமன்ற நிதிபதி இழஞ்செழியன் பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளை சேர்ந்த 3 மாணவர்களே...
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை...
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று இரவு 11 மணியளவில் புகுந்த இனந்தெரியாத மூவர் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சரமாரியாக வெட்டியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார். அவரது மனைவி வெட்டுக் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் இரட்டைக் குழந்தைகள் இவர்களுக்கு அருகில் இருந்தபோதும் இந்தச் சம்பவத்தில் அவர்களுக்குக்...
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம்...
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை...
வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சிங்கள மக்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் ஏராளமான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் காணிகளையும், இந்து ஆலயங்களின் காணிகளையும் ஆடாத்தாகப் பிடித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுவருவது...
வடமாகாணசபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வடமாகாணசபை நிறைவேற்றியுள்ளதானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது. இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழரசு கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி...
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 640 ஏக்கர் காணி அடுத்த வாரம் மக்கள் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்படுகிறது. வலி. வடக்கில் 1500 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் இதையடுத்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியார்ச்சி பலாலி வந்து மாவட்டச் செயலர் மற்றும் படைத்தரப்புகளுடன் கலந்துரையாடினர்....
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார். புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே...
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை. என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (17.08.2016) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு...
'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தின் ஐந்து அமைச்சின்...
இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால்...
Loading posts...
All posts loaded
No more posts
