- Tuesday
- August 5th, 2025

காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இரவு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர் இதனை குறிப்பிட்டதாக பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன. காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டால், அதன் மூலம் பாதுகாப்பு படையினர்...

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ம் திகதி யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது...

யாழ். தீவுப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகளில் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களின் சடலங்கள் அதில் இருக்கலாம் என, காணாமல் போனோரின் உறவினர்கள் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை மதியம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்ற இராசையா ஆனந்தராசாவை நேரில் சந்தித்து கலந்துரையாடியபோதே...

உரிமையாளர்கள் அல்லாத, அல்லது உரிமை கோரப்படாத பணம், காணி என்பவை அரசுடமையாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உரிமையாளர்கள் அற்ற காணிகள் மற்றும் உரிமை கோரப்படாது வங்கிகளில் வைப்புச்செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதிமோசடி விசாரணைப்...

நாட்டை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக...

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று(சனிக்கிழமை) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கடந்த புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில்...

இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரச கடற்படை ஆக்கிரமித்துள்ளது. அக் காணிகளை நிரந்தரமாக...

ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த 73 வயதான தா.மகேஸ்வரன் நேற்றிரவு 9.30 மணியளவில் தனது போராட்டத்தைக் கைவிட்டார். வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் பாரிய இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் இறுதியாக மாங்குளம் மற்றும் வவுனியா மதகுவைத்தகுளம்...

"பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்பிரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்." இவ்வாறு முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது:- "நாம் இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து என்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கொழும்புக்கு விசாரணைக்கு என அழைத்துச்...

அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்கிடமாக ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த அரசியல் கைதியை உடனடியாக வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் கோரியதையடுத்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்....

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு வயிற்றுவலி வாந்திபேதிக்கு ஊசி ஏற்றியிருக்கலாம் எனவும் குதர்கமாகப் பேசியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் குழுநிலைக் கூட்டம் கடந்த 9ஆம் திகதி...

கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டி இருக்கின்றதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே...

தற்போது அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை மீண்டும் சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பிணையில்...

காணாமற்போனோர் அலுவலக அமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் உடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இதனை நிறைவேற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.இதனால் பாராளுமன்றத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற நடவடிக்கைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள் காயமடைந்துமுள்ளனர். கிளிநொச்சி ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு, ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரயில் பாதைக்கு சற்றுத் தள்ளி நிகழ்வொன்று இடம்பெற்ற இடத்திலிருந்தே இந்த...

இறுதி யுத்தத்தின் போது காணாமல்போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படத்தில் நிற்கின்றார். அவளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள். எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை என தாயார் மு.ஜெயவனிதா தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கருத்தறியயும் செயலணியிடமே அவர் இவ்வாறு...

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான எந்த விடயங்களும் இடம்பெறவில்லை.இது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற வட மாகாண சபையின் 58ஆவது அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 'ஐக்கிய நாடுகள் சபையின்...

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பூநகரியைச் சேர்ந்த நடராஜா கலியுகராஜா (வயது 54) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த மாதம் 24ஆம் திகதி திடீர் காய்ச்சல் காரணமாக பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் மேலதிக...

கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி காணப்படுகின்ற ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் மிகப்பெரும் விகாரைக்கான சுற்றுமதில் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு இரனைமடு குளத்தினை தீர்த்த தளமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு...

All posts loaded
No more posts