சம்பந்தனின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி - பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாகவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை...

உறுதிமொழியை ஏற்க மறுத்த பரவிபாஞ்சான் மக்கள், ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர். குறித்த பிரதேசத்தின் 4 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்கமுடியுமெனவும், ஏனைய 16 ஏக்கர் காணிக்கு இன்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே மக்களை அவர்களது போராட்டத்தைக்...
Ad Widget

முன்னாள் போராளிகள் விவகாரம்: அமெரிக்க வைத்தியர்கள் மூலம் பரிசோதிக்க முடிவு

முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். வடமாகாண சபையின் 58வது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இங்கு பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்...

 கடற்படையினர், மீனவர்களுக்கு அபாய எச்சரிக்கை

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று (16) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் கடலில் சஞ்சரிக்கும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து...

வலி.வடக்கில் மேலும் 700 ஏக்கர் காணி ஓரிரு வாரத்தில் விடுவிக்கப்படும்

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் இன்னமும் தம்வசம் வைத்துள்ள காணிகளில் விடுவிக்கப்படக்கூடிய அனைத்தும் அடுத்து வரும் ஒரு வருட காலப்பகுதிக்குள் மக்களிடம் கையளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஜீன் மாதத்திற்கு முன்னர் அவற்றை விடுவிப்பதற்கான கால அட்டவணை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிவில் அதிகாரிகளிடம் நேற்றுத் தெரிவித்தார். இதன்...

பௌத்தமயமாக்கலுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்; அமெரிக்காவிடம் வலியுறுத்து

தமிழர் தாயக பூமியில் பௌத்த விகாரைகள் அமைப்பதும், பலவந்தமான சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் மக்களின் கலாசார உரிமைகளைப் படுகொலை செய்வதற்கு சமனாகும் என்று ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப்பிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே மிகச்சிறந்தது என்று எடுத்துக்காட்டியுள்ள கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், உரிய தீர்வை...

2009ஆம் ஆண்டு புலிகளை ஏமாற்றி சரணடையவைத்த றோ!

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது சரணடையும் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கமாட்டார்கள் என இந்தியாவின் றோ அமைப்பு நம்பிக்கை அளித்ததாக நீனா கோபால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகவியலாளரான நீனா கோபால் எழுதிய ‘ராஜீவ்காந்தி கொலை’ என்ற நூலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் 2009ஆம் ஆண்டு மே மாதம்...

மாத்தையா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாத்தையா எனப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 1989ம் ஆண்டு முதல் மாத்தையா றோ உளவாளியாக கடமையாற்றியிருந்தார் என, இந்தியாவில் வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் நீனா கோபல் குறித்த நூலை எழுதியுள்ளார்....

சம்பந்தன் மீது அன்ரனி ஜெகநாதன் தாக்குதல்!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரா.சம்பந்தன் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை சாந்தி சிறீஸ்கந்தராசாவுக்கு...

முன்னாள் போராளிகள் விவகாரம்: விஷேட வைத்தியர்களுடன் கலந்துரையாடல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்காக விஷேட வைத்தியர்களுடன் மூன்று பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் பீ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்படி, இவர்களை பூரண வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன்போது இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பிலான உண்மைத் தன்மை பற்றி மட்டுமே ஆராயப்படவுள்ளது...

நாமல் மீண்டும் கைது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில் இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு எட்டு இருபது மணியளவில் செய்திசேகரிக்கச் சென்ற கிளிநொச்சியின் நான்கு பிராந்திய செய்தியாளர்களை துப்பாக்கியுடன் வந்த இராணுவத்தினர் தம்மை...

முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம்; எம்.ஏ. சுமந்திரன்

முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம் எனவும் இதனை இலகுவாக புறக்கணித்து செல்ல முடியாது எனவும் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் போராளிகள் அதிகளவில் மரணிப்பதாக வந்த செய்திகளை மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்...

மைத்திரி, ரணில் அரசால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்! உலகத் தமிழர் பேரவை நம்பிக்கை

சிறிசேன - ரணில் அரசாங்கத்தால் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது உலகத் தமிழர் பேரவை. காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான அலுவலக சட்ட மூலத்தை இலங்கை அரசு நிறைவேற்றியமை உலகத் தமிழர் பேரவை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அந்த அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது குறித்து உலகத்...

படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள்!! ஜனாதிபதி உறுதி

காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இரவு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர் இதனை குறிப்பிட்டதாக பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன. காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டால், அதன் மூலம் பாதுகாப்பு படையினர்...

யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ம் திகதி யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது...

மூடப்பட்டுள்ள கிணறுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்!

யாழ். தீவுப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகளில் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களின் சடலங்கள் அதில் இருக்கலாம் என, காணாமல் போனோரின் உறவினர்கள் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னை மருத்துவப்பரிசோதனைக்குட்படுத்துமாறு அரசியல்கைதி கோரிக்கை!

அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை மதியம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்ற இராசையா ஆனந்தராசாவை நேரில் சந்தித்து கலந்துரையாடியபோதே...

உரிமையாளர்கள் இல்லாத காணி, பணம் அரசுடமை!

உரிமையாளர்கள் அல்லாத, அல்லது உரிமை கோரப்படாத பணம், காணி என்பவை அரசுடமையாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உரிமையாளர்கள் அற்ற காணிகள் மற்றும் உரிமை கோரப்படாது வங்கிகளில் வைப்புச்செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதிமோசடி விசாரணைப்...

எச்சரிக்கை! கடுங்காற்று வீசக்கூடும்!

நாட்டை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக...
Loading posts...

All posts loaded

No more posts