பளையில் துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கச்சார்வெளிப் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அவசர காவல்துறை இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளை காவல்துறையினர்...

கடும் நிபந்தனைகளுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி!

சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மாலை அனுஷ்டிக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது பெயர்கள் காணப்படக் கூடாது என்ற...
Ad Widget

எமது நினைவேந்தல் நிகழ்வு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், உயிர் நீத்தோருக்கான எமது பிரார்த்தனை நிகழ்வு தற்போது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே நான் காண்கின்றேன் என்றார். தொடர்ந்து உரையாற்றிய...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கிளிநொச்சியில் தனி சிங்கள கொடி!

கிளிநொச்சி நகரில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும்...

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்: பொதுச்சுடர் ஏற்றினார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து...

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்!

முல்லைத்தீவில் இன்று மாலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை வன்மையாக கண்டிப்பதோடு, குறித்த தீர்ப்பிற்கு எதிராக இலங்கையின் சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அணிதிரள வேண்டுமென உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களது நினைவாக சிலைகளை அமைத்து, கல்வெட்டுக்களை பதித்து இன்று மாலை சிவில் அமைப்புகள்...

வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்த மூவருக்கு 3 வருடங்களும் 5 பேருக்கு ஒரு வருடமும் கடூ­ழி­யச் சிறை

வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்த 8 பேரில் மூவ­ருக்கு 3 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னை­யும் 5 பேருக்கு ஒரு வருட கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னை­யும் விதித்து யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணம், மடத்­த­டி­யில் இடம்­பெற்ற வாள்­ வெட்­டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து 8 பேர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­ பட்­ட­னர். அந்த கும்­ப­லுக்கு டில்லு...

வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நீண்ட உரையாடல்

02.04.2017 அன்று மக்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக காணாமற் போனோர் பற்றியும் காணிகள் திரும்பவும் உரித்தாளர்களுக்குக் கையளிப்பது பற்றியும் வேலையற்ற பட்டதாரிகள் சம்பந்தமாகவும் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதிலளளிக்கும் முகமாக இன்றைய (17-5-2017) தினம் என்னை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தமது வாசஸ்தலத்திற்கு அழைத்திருந்தார். அங்கு பல அமைச்சர்களும் சட்டத்துறை தலைமையதிபதியும், கிளிநொச்சி, முல்லைத்தீவு...

உறவுகளை நினைவுகூர தயாராகிறது முள்ளிவாய்க்கால்

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு, இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் திடலில் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு...

சிறையில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞர்கள்மீது பாலியல் வதைகள் : அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு!

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள்மீது பாலியல் வதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்மீது சித்திரவதைகயாக பாலியல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஓல் செவைவேர்ஸ் புறஜெக்ற் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அந்த அமைப்பினால்...

நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இன்றைய தினம் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையுத்தரவில், சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும்...

யாழில் ஆசிரியர் அடித்துக்கொலை!

சிறுப்பிட்டி ,மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவிசரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஓய்வு பெற்ற அத்தியார் இந்து கல்லூரியின் விவசாய பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் ஓடு வழியாக உள்நுழைந்த திருடர்களினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகை!! : நான்கு பெண்கள் கைது

கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது.இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன அவர்களுக்கு கிளிநொச்சி...

சம்பந்தனின் அலுவலகத்துக்கு முன்னால் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு முன்னால், காணாமற்போனோரின் உறவினர்கள், அமைதியான முறையில் தற்போது ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரிடம் மனுவொன்றைக் கையளிப்பதற்காக வருகை தந்திருந்த உறவினர்களே, இவ்வாறு அமைதிப் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். “காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை விரைவில் ஸ்தாபிப்பதற்கு,...

பஸ் மோதியதில் மாணவன் பலி : ஊர்காவற்றுறையில் பதற்றம்

ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியே பாலக்காட்டுச் சந்தியில் வைத்து துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது.இதன்போது மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார்...

முஸ்லிம்களை வெளியேறுமாறு பௌத்த பிக்குகள் அச்சுறுத்தியதால் தோப்பூர் பிரதேசத்தில் பதற்ற நிலை

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு பௌத்த பிக்குகள் அச்சுறுத்தியதால் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்கின்ற நிலையில், ஆளுநருடன் தற்போது அவசர சந்திப்பொன்று நடைபெற்று வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வரும் இச் சந்திப்பில், முஸ்லிம் மற்றும் பௌத்த மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளார். எனினும், ஊடகவியலாளர்களுக்கு...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தமிழின அழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் !

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் மாணிக்கபுரம் வாவிக் கரையில். (வாகரை வைத்தியசாலைக்கு அண்மையில் மட்டு-திருகோணமலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடைபெறும்....

புங்குடுதீவு மாணவியின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு கோரி மாணவியின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி (தே.அ.அ.இல. 668512127V) ஆகிய நான் தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது. எனது மகள் வித்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தாங்கள்...

தென்னிலங்கை அரசியல்வாதிகள் போல பணத்திற்காக நாம் அரசியல் செய்பவர்கள் அல்லர்: சிவாஜிலிங்கம்

“தென்னிலங்கை அரசியல்வாதிகள் போல பணத்திற்காக நாங்கள் அரசியல் செய்பவர்கள் அல்லர். நாங்கள் எங்களுடைய மக்களின் உரிமைக்காக செயற்படுபவர்கள்” என வட.மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்ற (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றன. இதன்போது கருத்துத்...

வெள்ளை வானுக்கு அவர்களே பொறுப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறைமையின் கீழ், ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளே, வெள்ளை வானுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதால், இராணுவம், கடற்படை, வான்படை அதன் கீழ் இயங்கும் ஊர்காவற்படை ஆகியவற்றால்...
Loading posts...

All posts loaded

No more posts