Ad Widget

வலியுறுத்த மாட்டேன் : சம்பந்தனுக்கு சி.வி. விக்கினேஸ்வரன் கடிதம்

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டாய விடுமுறையை வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்து ஒரு மாதகால கட்டாய விடுமுறையையே தான் வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்வதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அனுப்பியுள்ள பதில் கடித்த்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடதத்தில்,

இன்று காலை ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி ஆகியோர் என்னை சந்தித்தனர்.

மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் மீது புதிய விசாரணைகளை நடத்துவதற்காக, விசாரணைகளில் அவர்கள் தலையிட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே அவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் இந்த காலப்பகுதியில் அவர்களுக்கான வரப்பிரசாதங்களை தடையின்றி அனுபவிக்க முடியும் என்பதால், இது அவர்களுக்கான தண்டனை இல்லை. அதேநேரம் அவர்கள் இந்த விசாரணைகளில் தலையிட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை தம்மால் வழங்க முடியாது என்று, இரா.சம்பந்தன் முந்திய கடிதத்தில் தமக்கு தெரியப்படுத்தியமையை புரிந்துக்கொள்ள முடிகிறது.

அதேநேரம் குறித்த அமைச்சர்கள் விசாரணைகளில் குறுக்கிடக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்குவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பாராமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனும், மதத்தலைவர்களும் இணங்கி இருக்கின்றனர்.

இந்த இணக்கப்பாட்டை கருத்தில் கொண்டு, குறித்த இரண்டு அமைச்சர்களுக்கான கட்டாய விடுமுறை என்ற விடயத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று சீ.வி.விக்னேஸ்வரன் அக் கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts