- Tuesday
- September 2nd, 2025

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஷ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத...

வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு இளைஞர்களின் சீரழிவிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு...

ஆவா குழுவைச் சேர்ந்த தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. புறக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நிஷா விக்டெர் என்பவர் ஆவா குழுவின் தலைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு யாழ். பேரூந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டில்ரூக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்....

வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களில் அந்தப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இன்று காலை முதல் வீதிகளில் பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து...

யாழ்ப்பாணம் பகுதியில் சிவில் பாதுகாப்புச் சட்டங்களை அமுல்படுத்த அதிரடிப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் யாழ்.பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை...

வடக்கில் உள்ள அம்மாச்சி உணவகங்களுக்கு சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் என்ற பெயரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டு, மிகப் பிரபலமாகியுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதுபோன்ற உணவகங்களைத் திறப்பதற்கு...

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்....

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பொலீசார் பெற்றுக்கொள்வதே ஆகும். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோவின்) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸார் அவசர அவசரமாக முன்னாள் போராளிகள் மீது குற்றஞ்சுமத்துவது, வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரட்னம் குறிப்பிட்டுள்ளார். அல்லது முன்னாள் போராளிகளை இலக்குவைத்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்கேதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கோப்பாய் வாள்வெட்டு...

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர முப்படையினரும் களத்தில் இறக்கப் படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் கூறியது தொடர்பில்...

வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்று இரவு சுண்ணாகத்தின் மத்தியில் இடம்பெற்றுள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரும் 21 வயது மதிக்கத்தக்க இருவரும் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

வடக்கில் தற்போது நடைபெறும் குற்றச்செயல்களுடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்துவதானது, இலங்கையில் ஜனநாயக மரபுகளுக்கு இடமில்லையென சர்வதேசத்தில் எதிரொலிக்கச் செய்யுமென ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இக்கட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னுமொரு ஆயுத அல்லது பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியமில்லை என்ற அடிப்படையில், முன்னாள் விடுதலைப் போராளிகளே வாள்...

நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்களுக்குப் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்டனம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் அரச தலைவர், தலைமை அமைச்சர் உள்ளிட்ட12 தரப்பினருக்கு இந்து சமயத் தொண்டர் சபை கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20...

அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச...

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் சமூகத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்...

மேற்கத்திய நாடுகள் தெரிவிப்பது போன்று வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு...

கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. இந்த விசாரணைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும்...

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரண்டு சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயது மற்றும் 22 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் மீது ஆவாகுழுவினைச் சேர்ந்த...

யாழ். குடாநாட்டில் இராணுவம், கடற்படை, விமானப்படையினருடன் பொலிஸ் அதிரடிப் படையினரையும் இணைத்து இறுக்கமான பாதுகாப்பு கட்டமைப்பை செயற்படுத்தவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலைத் தொடர்ந்து அங்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்....

All posts loaded
No more posts