பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது: பட்டியல் இணைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.-24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியமை,...

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு!

யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொக்குவில், பொற்பதிப் பகுதியில் நேற்று (ஞாற்றுக்கிழமை) குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரே இந்த வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்....
Ad Widget

துப்பாக்கிதாரி நீதிபதியைக் கொலை செய்வதற்காகவே வந்தார்: ரெஜினோல்ட் குரே

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்தார் என வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் ஏற்பாட்டில் சாதாரண தர பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு...

யாழ்ப்பாணத்தில் தீவிர பாதுகாப்பு!

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோப்பாய் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மர்மநபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஆவா குழுவின் செயற்பாடா என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

’வடக்கு மாகாண சபையில் எமக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது’ : த.சித்தார்த்தன்

வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு, தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, "வடக்கு...

வறட்சியால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு உதவி

வடமாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 48 இலட்சம் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 21 இலட்சம் ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 இலட்சம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாக...

அத்தியாவசிய சேவைகளுக்கு தடை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயல் : இரா. சம்பந்தன்

அத்தியாவசிய சேவைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அத்தியாவசிய மக்கள் சேவைகள் சட்டத்தின் கீழான ஏற்பாடுகள் மீதான விவாதத்தில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சேவைகளை முடக்குவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. கூட்டு எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் கும்பல், வேலை...

யாழில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!

யாழ். திருநெல்வேலி கலட்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினேஸ்குமார் சலோஜிதன் என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கலட்டிப் பகுதியில் வேலைக்காக வந்த குறித்த இளைஞரை நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த...

யாழில்.பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

யாழில்.பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது இனம் தெரியாதநபர்கள் தாக்குதலினை மேற்கொண்டு உள்ளார்கள். யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிங்கராஜா (வயது 28) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நெல்லியடியில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று விட்டு மீண்டும்...

ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத தடைப் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தால் நேற்று இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக எவ்வித சாட்சியும் பதிவாகவில்லையென தெரிவித்த நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பயங்கரவாத...

நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் முன்னாள் போராளி அல்ல!!

“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வராசா ஜயந்தன் (வயது 39) என்பவர் எனது கணவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அவர், இருந்தது கிடையாது. அவர் ஒரு முன்னாள் போராளி எனக் கூறுவது வதந்தி. எனது கணவர் இதைத் (துப்பாக்கிச் சூட்டை) தெரியாமல் செய்துவிட்டார்” என்று, அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (22) நல்லூர் தெற்கு வீதியில்,...

மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகளையும் தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை நேற்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது. நீதிபதியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச்...

பெற்றோலிய தொழிற்சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இதற்கான முடிவை தொழிற்சங்கங்கள் எடுத்துள்ளன. கனிய எண்ணெய் குதங்கள் இந்தியா உட்பட்ட நாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுவதை கண்டித்தே பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.இதன்காரணமாக போக்குவரத்தில் பாரிய பாதக நிலை ஏற்பட்டது....

வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலமொன்றை பதிவுசெய்யுமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில்...

பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அத்துடன், அதே நீதிமன்றத்தில் இடம்பெற்ற மற்றுமொரு வழக்கில், இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, சக இராணுவ கோப்பரல் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக சிப்பாய் ஒருவருக்கு...

நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ததுடன், மருத்துவ பரிசோதனைக்கு...

எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

எரிபொருள் விநியோகம், அத்தியவசிய சேவையாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தபட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் கையெழுத்திடப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோலிய ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இன்று அதிகாலை முதல்...

“சுட முடியுமா என கேட்டார் சுட்டுவிட்டேன்!” : கொலையாளி வாக்குமூலம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்த நபர் இன்று காலை பொலிஸில் சரணடைந்தார். இவர் நல்லூரை சொந்த இடமாக கொண்ட சிவராஜா ஜெயந்தன் 39 வயது இவரிடம் மேற்கொண்ட பொலிஸ்விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கையில், நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி...

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு வடக்கு முதலமைச்சர் அஞ்சலி

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் இல்லத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற முதலமைச்சர், உயிரிழந்த பாதுகாவலரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நல்லூர் வீதியில் நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை...

நாடளாவிய ரீதியில் கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம்: மக்கள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தலைநகர் கொழும்பில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்...
Loading posts...

All posts loaded

No more posts