நாமலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பதிலடி!

தமிழ்மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெறவேண்டுமாயின் நாமல் ராஜபக்ஷ ஆக்கபூர்வமாக முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை பெறாது இருக்க முடியாது என்பதை சம்பந்தன் ஐயா ஏன் உணரவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். [caption id="attachment_87594" align="aligncenter" width="634"] In this July 18, 2017, photo, a Sri Lankan man known as Witness #202 shows branding...
Ad Widget

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஏன் எதிர்கட்சித் தலைவர் மௌனமாக இருக்கின்றார்?? : நாமல் ராஜபக்‌ஷ

தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஏன் எதிர்கட்சித் தலைவர் மௌனமாக இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பியுள்ளார். நாமல் இந்த கேள்வியை நேற்றய தினம் (செவ்வாய்க்கிழமை) தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவேற்றியுள்ளார். “அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை கோராது...

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல்

வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கை ஒன்று இன்று வௌியிடப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது எனத் தெரிகிறது. மேலும், இலங்கை பெற்றோல் களஞ்சிய டர்மினல்ஸில் இருந்து, இன்று 2400 மெற்றிக்தொன் பெற்றோலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்திற்கருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது

இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை குறித்த இரணைமடுக் குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும்...

பெற்றோல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாட்டில் காணப்பட்டு வரும் பெற்றோல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்க வேண்டும் என அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிய வள அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில், கனிய எண்ணெய் வள அமைச்சின் செயலாளர் உபாலி தென்னகோன் கருத்து வெளியிடுகையில்,...

தேசிய தலைவர் எம்முடனேயே இருக்கிறார்! : புலனாய்வுத் துறை தளபதி அன்பு தெரிவிப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் எங்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக, விடுதலை புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வு துறை தளபதிகளில் ஒருவராக இருந்த அன்பு என அழைக்கப்படும் இன்பராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர்...

‘கைதிகளுக்காக போராட்ட வடிவம் மாறும்’ : பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் நீதிமன்றில் உள்ள வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது : ஆனந்தசங்கரி

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு, எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், “சம்பந்தனிடம் இருந்து, தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் நேற்று முன்தினம் (04) வௌியிட்டுள்ள...

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 நாட்களுக்கு கடுமையான மழை தொடரும்!!! : வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட வடமாகாணத்தின் பல இடங்களில் கடுமையான மழை பெய்வதனால் வீதிகள் அனைத்தும் வெள்ளம் நீரால் சூழ்ந்துள்ளன. தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக கடுமையான மழை பெய்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வளிமண்டல தாழமுக்கம் நிலைகொண்டிருப்பதனாலேயே யாழ்ப்பாணத்தில் கடுமையான மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். அத்துடன்...

கூட்டமைப்பின் முடிவுகளை தமிழரசுக் கட்சி தனித்து எடுக்க முடியாது: தமிழ் மக்கள் பேரவை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களை, தமிழரசுக் கட்சி தனித்து எடுப்பதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கி.தேவராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

அரியாலை படுகொலை சம்பவம்: STF அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி டொன் பொஸ்கோ (வயது-24) என்ற இளைஞன், இனந்தெரியாதோரால் சுட்டு...

உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரி மக்கள், மாணவ பிரதிநிதிகள் சிறைச்சாலை விஜயம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளிடம், அவ் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் கோரிக்கை விடுவிப்பதற்காக யாழ்.பல்கலைகழக மாணவர்களும் தமிழ் அரசியல் தலமைகளும் இன்று சனிக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு செல்லவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றத்திற்கு மீண்டும் வழக்குகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பல்கலைகழக மாணவர்களாகிய...

பல்கலை மாணவர் அழைப்பை உதாசீனம் செய்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகைதருமாறு வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் இவ் அழைப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள அதேவேளை தமிழரசுக்...

மாணவர் போராட்டம் தோல்வியிலேயே முடியும் என்கிறார் துணைவேந்தர்!

நிர்வாகத்தை முடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தவறானது. இப்போராட்டம் தோல்வியிலேயே முடியும் என யாழ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்கள் நிர்வாகத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. நிர்வாக முடக்கல் எதிரொலியாக 3 பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத்...

தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு பல்கலை மாணவர்கள் பகிரங்க அழைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு வருமாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக முன்றலில் இக் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் மாணவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம்...

அரியாலை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, ஓட்டோ, மோ.சைக்கிள் அதிரடிப்படை முகாமுக்குலிருந்து மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் சந்தியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டனர். யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு இவை மீட்கப்பட்டன. கடந்த...

போராட்டத்தை கைவிடுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அழுத்தம்!! மாணவர்கள் மறுப்பு!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ வணிக பீடம் ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் போராட்டத்தை கைவிடவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தாங்கள், தொடர்ந்தும் போராட்டத்தை நடத்துவோம் என...

வாள்களுடன் நின்ற நான்கு இளைஞர்கள் கைது

யாழ். மடத்தடி வீதியில் வாள்களுடன் நின்ற 4 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பொலிஸார் நேற்று (30.10) இரவு 11 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் 4 இளைஞர்கள் வாள்களுடன் வீதியில் நின்றுள்ளனர். 4 பேர்களிடமும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் யாழ்.மடத்தடி...

ஏ9 வீதியில் கடும் பனி மூட்டம்!! சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் - கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Loading posts...

All posts loaded

No more posts