சாவகச்சேரியில் இருவேறு இடங்களில் வாள் வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!!

சாவகச்சேரி மீசாலை பகுதியில் நேற்று இரவு 7.30 அளவில் இரு வேறு இடங்களில் வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில், இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீசாலை கிழக்கு – மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு, கடைக்கும் சேதமேற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது, காயமடைந்தவர் மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (20) என்ற இளைஞராகும்.

இதேவேளை, அதே குழுவினர் மீசாலை மாவடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் ´கரம் போட்´ விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்களால் வெட்டிவிட்டு அங்கிருந்தது தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது மீசாலை மேற்கைச் சேர்ந்த அல்பிரட் டிலச்சன் (17) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts