குடாநாட்டில் அதிகரிக்கும் குற்றங்கள்! : நீதிபதி இளஞ்செழியன் தீவிர அக்கறை

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுடன், யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் இச்சந்திப்பு இடம்பெற்றது. வடக்கில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது, பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், இவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய...

ஜனாதிபதியிடமிருந்து ஆக்கபூர்வமான பதிலில்லை: காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கவலை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியை சந்தித்திருந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட...
Ad Widget

ராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

ராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு ராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு நேற்றய தினம் (புதன்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த...

யாழ்.கோட்டைக்குள் ராணுவத்தை அனுப்பியே தீருவேன் : ஆளுநர் குரே

வரலாற்று தொன்மைமிக்க சின்னமான யாழ்ப்பாண கோட்டையில் இலங்கை படையினரை நிலைநிறுத்துவது குறித்து பல எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும், இந்நடவடிக்கையை செயற்படுத்துவதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உறுதியாக உள்ளார். அந்ந வகையில் வடக்கில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டைக்கு அனுப்பிவைக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுநர்...

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் என்ன? விளக்குகிறார் விக்­கி­னேஸ்­வரன்

நாமே தயா­ரித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக கைவி­டு­வ­தற்கு எமது தலை­மைகள் முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு எமது சட்­ட­ரீ­தி­யான நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்த உரித்தும் இல்லை என்று எம்­மவர் நினைத்தால் அது முற்­றிலும்...

மாவீரர் தினத்தை தேர்தல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம்: முன்னாள் போராளி காக்கா அண்ணன்

”அரசியல் கட்சிகளினதும் அரசியல்வாதிகளினதும் தேர்தல் தேவைக்காக மாவீரர் தினத்தை பயன்படுத்தக் கூடாது. அதன் புனிதத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்” என முன்னாள் போராளியான காக்கா அண்ணன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...

பீதியில் யாழ். மக்கள்! வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலால் எட்டு பேர் படுகாயம்!!!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நான்கு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், எட்டு பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில், அறுகால்மடம், நல்லூரடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இரண்டு மணித்தியாலங்களுக்குள் இச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் சங்குவேலி பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது வாள்வெட்டுத்...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், ஏனைய அரசியல் கைதிகளின்...

யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன், ஈச்சமோட்டை பகுதியில் ஒருவர் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். பிரதான வீதியில் உள்ள சலவை தொழிலில் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அந்த இடத்தில் நின்ற...

தமிழ்த் தலைவர்களின் செயற்பாட்டால் அழிவுப் பாதையில் தமிழ் இனம்!! : சி.வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டிகள், முரண்பாடுகள் காரணமாக, ஒட்டுமொத்த தமிழினமும் அழிவுப் பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதென, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (12) காலை இடம்பெற்ற, தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு...

7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!!: 135 பேர் பலி!

ஈரான் - ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஈராக்கில் இன்று அதிகாலை ஹலாப்ஜா நகரம் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில்...

ததேகூவில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் முக்கிய பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கைகள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஈபிஆர்எல் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலும், அண்மையில் வட...

ஈழத்தை உருவாக்க கனவு காண வேண்டாம் : ஜனாதிபதி

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் ஈழம் என்ற கனவை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த முயற்சி கைகூடாது என தெரிந்தும் அவர்கள் அந்த எதிர்பார்பில் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்....

யாழில் அடை மழை, ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை இரண்டாயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதற்கமைய உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 106 குடும்பங்களும், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறையில் 40 குடும்பங்களை சேர்ந்த...

யாழில் கனமழை!! மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை!!

யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது....

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் இம்முறை வரவுசெலவுத்திட்டம் : எதிர்க்கட்சி தலைவர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவுசெலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சகல மக்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் வரவு, செலவுத் திட்டத்தை இம்முறை தயாரித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியிருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் மேலும்...

வடக்கில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது: வடமாகாண சுகாதார அமைச்சர்

கடந்த வருடத்தை விட இவ்வருடம் வட மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக மன்னாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த வருடம் 2016ஆம் ஆண்டுடன்...

கொடிய வறுமையில் முதலிடத்தில் கிளிநொச்சி மாவட்டம்!

வறுமையான மாவட்டங்களில் வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களே முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளதோடு கொடிய வறுமையான மாவட்டங்களாக இனங்கானப்பட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் இடம்பெறும் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர்...

தமிழ் மக்களுக்கு சமஸ்டி ஒன்றே தீர்வு: வடக்கு முதல்வர்

சமஸ்டி அரசியல் அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களின் உரிமைகள் மீளக்கிடைக்கும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் செயலகத்தில் நேற்றய தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ”எமது பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்பதே எமது கரிசனை. எமது...

கொழும்பை வந்தடைந்தது எரிபொருள் தாங்கிய கப்பல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டுபாயிலிருந்து கொள்வனவு செய்த 40000 மெட்ரிக் டொன் எரிபொருளை தாங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் 92 ஒக்டைன் ரக பெற்றோல் 32500 மெட்ரிக் டொன்னும், ஒக்டைன் 95 இற்கான பெற்றொல் 7500 மெட்ரிக் டொன்னும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இதனை பரிசோதிப்பதற்காக அங்கு பரிசோதனையாளர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என...
Loading posts...

All posts loaded

No more posts