Ad Widget

வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

‘வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன, என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதியில் நேற்று மாலை பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியதுடன் வழி பறிப்பிலும் ஈடுபட முயற்சித்துள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த குணரட்ண தலைமையிலான குழுவினர் நேற்றிரவு சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

அதன் போதே சந்தேகநபர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஏழுபேர் அடங்கிய அந்தக் கும்பலில் நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கூரிய கத்திகள் மற்றும் இரும்புக்கம்பிகள் கேடர்கள் மற்றும் இலக்கத்தகடுகள் மாற்றப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர், மானிப்பாய், சண்டிலிப்பாய் மற்றும் அளவெட்டி பகுதிகளைச் சேர்ந்த பத்தொன்பது தொடக்கம் இருபத்தி இரண்டு வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

நான்கு சந்தேகநபர்களும் விசாரணையின் பின்னர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவார்கள். ஏனையவர்களையும் கைது செய்ய தாம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts