சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பு கோர வேண்டும்! : ஜனநாயக போராளிகள் கட்சி

“இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும்” என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயக அரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக...

ஈ.பி.டி.பி கட்சியின் மூத்த உறுப்பினர் தவராசா தமிழரசு கட்சியுடன் இணைவு?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர். எல்.எப்.கட்சி பிரிந்து சென்ற நிலையில் ரெலோவும் புளொட்டும் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் தமிழரசு...
Ad Widget

தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமஉரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முன்னுரை தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதையும் இலக்காகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இணைந்து தேர்தல் கூட்டு ஒன்றை உருவாக்கியிந்தன....

அரசின் வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்

தேர்தல் நடத்தப்பட முன்னதாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்த வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ‘எலிய’ அமைப்பின் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “உலகிலேயே, அரசு முன்வைத்த ஒரு வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ்...

ஆளணித் தெரிவில் இழுபறி: கூட்டத்திலிருந்து ரெலோ மற்றும் புளொட் வெளியேறின!

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள் அதிருப்தியுடன் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற மேற்படிக் கூட்டத்திலிருந்தே குறித்த கட்சிகள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய...

அனர்த்த நிலமைகள் குறித்து யாழில் விஷேட கலந்துரையாடல்

அனர்த்த நிலமைகள் குறித்து வட, கிழக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. அவசர நிலமைகள் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்வது தொடர்பில் ஆராயும் பொருட்டு ஏற்பாடு ​செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல், யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில்...

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என அறிவிக்கும் பெயர்ப் பலகை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும்...

சாவகச்சேரியில் இருவேறு இடங்களில் வாள் வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!!

சாவகச்சேரி மீசாலை பகுதியில் நேற்று இரவு 7.30 அளவில் இரு வேறு இடங்களில் வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீசாலை கிழக்கு - மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு, கடைக்கும் சேதமேற்படுத்தி...

முன்னாள் போராளிகளும், வடக்கு முக்கியஸ்தர்களும் மஹிந்தவுடன் கைகோர்ப்பு?

எதிர்வரும் தேர்தல்களில் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களும், வடக்கு தமிழ் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிட முன்வந்துள்ளதாக பொதுஜன முன்னணியின் வடமாகாண பொறுப்பாளர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஹிந்தவின் காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள்...

வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது : விக்னேஸ்வரன்

வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்குசமச்சீரில்லாததனி அலகு உருவாக்கப்படுவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகும் என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராவாராம் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவரிடம், வடக்கு,கிழக்கை இணைக்க முனைப்புடன் செயற்படுவதன் காரணம் என்ன என வினவப்பட்டது. இதற்கு பதிலளித்து முதலமைச்சர், வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இணைப்பு இல்லாத...

சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் மரணம், 14 மாவட்ட மக்கள் நிர்க்கதி

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேரை காணவில்லை எனவும், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல் அசாதாரண காலநிலை காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த 61,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இரத்தினபுரி,கண்டி,காலி,மாத்தளை,பதுளை,...

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும்...

வடக்கில் நாளை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் அனைவரும் நாளைக் காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடமாகாண...

“வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது!! இராணுவத்தினரும் குறைக்கப்படமாட்டார்கள்”

"வடக்கில் முக்கிய இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. அங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரும் குறைக்கப்படமாட்டார்கள்" என்று நாடாளுமன்றில் அறிவித்தது அரசு. இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கோரினாலும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அவர்களுடன் அரசு சமரசத்துக்குச் செல்லாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில் இடம்பெற்ற...

பருத்தித்துறை- பொன்னாலை வீதி போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது!!

யாழ்.கோட்டைக்கு இராணுவம் செல்லாது. அடுத்த சில தினங்களில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. யாழ். கோட்டைக்குள் இராணுவம் முகாம்களை அமைக்கமாட்டாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ். கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். எனினும் அவருடைய கருத்திற்கு...

போதை மிகுந்த நாடாக மாற்ற நல்லாட்சி முயற்சிக்கிறதா? சுகிர்தன் கேள்வி

போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று பியர் விலையைக் குறைத்து போதை மிகுந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறதா ? என வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், கேள்வியெழுப்பியுள்ளார். வடகிழக்கு மாகாணங்களில் பியர் விலை குறைப்பு பாரிய தாக்கத்தை உண்டாகும் எனவும் அரசாங்கம் பியர் விலை குறைப்பு தீர்மானத்தை மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை...

சுரேஸ் பிரேமசந்திரன், விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்!! தமிழரசு கட்சி அழைப்பு

தமிழர்களின் ஏழு தசாப்த கால துன்பங்களுக்கு முடிவு காண்பதற்கு, சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆவா குழுத் தலைவர் தப்பியோட்டம்!

யாழில் இடம்பெற்ற பிரதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரும், ஆவா குழுவின் தலைவருமான விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார். யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இன்று (வெள்ளிக்கிழமை) அழைத்துச் சென்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளார் குறித்த சந்தேகநபருக்கு நேற்று யாழ். நீதவான் நீதிமன்றம்...

யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; களத்தில் குதிக்கின்றது பொலிஸ் விஷேட அதிரடிப் படை!!

யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு சிரேஷ்ட...
Loading posts...

All posts loaded

No more posts