தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைக்கின்றது

உள்ளக விசாரணையினை வலியுறுத்துகின்ற 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு https://youtu.be/WCJ_XtPky2E ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய...

மஹிந்தவுடன் இணையும் மைத்திரி?

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு தீர்வுகாணும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரியை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டே மஹிந்த ராஜபக்ஷ குறித்த அழைப்பினை விடுத்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
Ad Widget

கையெழுத்துப் போராட்டத்துக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

இரண்டு வருட கால அவசாகத்தை உடன் நிறுத்தி இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு மாற்றுங்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கையெழுத்துப் போராட்டத்துக்கு அழைப்பு https://youtu.be/LFw80_Fw7yI ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக்...

தமிழ் கட்சிகள் சுயநலம் தவிர்த்து கொள்கை ரீதியிலாக ஒன்றுபட வேண்டும் : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் கட்சிகள் சுயநலத்திற்காக அன்றி கொள்கை ரீதியிலாக ஒன்றுபட வேண்டும் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழில் செய்தியாளர்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நடைபெற்றுமுடிந்த தேர்தல் முடிவுகள் தமிழ், சிங்கள தலைவர்கள் தங்கள் குறைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்பதாகவும் அவர் கூறினார்....

தாதியொருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை தொடர்பில் இரானுவத்தினரின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி கைது!

கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் கப்டன் தர இராணுவ அதிகாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஏற்கனவே மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இரானுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின்...

காணாமற்போனோரை மீட்டுத்தர மகிந்தவால் மட்டுமே முடியும்!

வடக்கு – கிழக்கில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால்தான் முடியும் என காணாமற்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும்...

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம் : 17 பேர் பலி! டொனால்ட் ட்ரம்ப் இரங்கல்!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றபோது கல்லூரியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்டதும் பல மாணவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர். உடனடியாக பொலிஸாரும் அப்பகுதியை சுற்றி...

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாணத்தில் தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆதரவினை வழங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது.கடந்த தினத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி , வட மாகாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர மற்றைய உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைக்க எவ்வித கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை...

மேற்குலகுடன் மகிந்த கைகோர்த்தால் மைத்திரியும் றணிலும் தூக்கிவீசப்படுவார்கள்

முதலமைச்சர் அவர்கள் கேள்வி பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார் அதில்... கேள்வி–நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது. அதே வேளை தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மீண்டும் இனவாதம்...

மகிந்த எமக்கு எதிரியில்லை ! அவர் நல்ல தலைவர் !! சேர்ந்து பணியாற்ற சம்பந்தன் அழைப்பு !!!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை. இந்த ஒத்­து­ழைப்பை அவர் நல்­க­வேண்டும் என்று, தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும்...

நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லை : மஹிந்த

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...

“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி...

தலைமைகள் நீக்கப்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறார் கஜேந்திரகுமார்

தமிழினம் நடுத்தெருவில் நிற்கக் காரணமாகவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...

யாழ். மாநகர சபை மேயராக மணிவண்ணன்!- சந்தர்ப்பத்தை வழங்குவாரா டக்ளஸ்?

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆட்சிக்கு ஈ.பி.டி.பி. யினர் வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையை ஆட்சியமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில், ஈ.பி.டி.பி. கைப்பற்றியுள்ள 10 ஆசனங்களே ஆட்சியை தீர்மானிப்பவையாக அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்திறன்...

ஈ.பி.டி.பியின் வேட்பாளர் மீது கூட்டமைப்பின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல்!!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச வேட்பாளர் மு.கிருஸ்ணபகவான் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காடையர் கூட்டம் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை வேளையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிருஸ்ணபகவான் தனது இல்லத்தில் இருந்த சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

“அனைத்தும் முடிந்துவிட்டது” என்பதையே நான் சைகையால் காண்பித்தேன்: பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ

லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொண்டையை அறுக்கும் சைகையைக் காண்பித்து ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ தாம் அவ்வாறு சைகை காண்பித்தமை அனைத்தும் முடிவடைந்துவிட்டது எனக் கூறுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார். ‘நான் என்னுடைய சைகையினால் அனைத்தும் முடிவடைந்துவிட்டது என்பதையே அவர்களுக்கு காண்பித்தேன். நான் இலங்கையின் இலட்சினையை காண்பித்தபோது இதுவே உங்கள்...

தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியருக்கு எதிராக விசாரணை நடத்தப்படாது: இராணுவத் தளபதி

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் எந்தவகையிலும், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் செயல் அல்ல எனத்...

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் க.கிரிதரன் புதன்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.அவர் தற்போது மந்திகை வைத்தியசாலையின் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மந்திகை வைத்தியசாலை பணியாளரான அவர் கிரி என்ற பெயரில் அழைக்கப்பட்டுவந்திருந்தார்.யுத்த நெருக்கடியான காலப்பகுதியில் அவரது சேவை...

யாழில் தேர்தல் கடமையில் 6,500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தபடவுள்ளனர்: அரசாங்க அதிபர்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் வாக்களிப்பு நிலைய ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

கூட்டமைப்பு துரோகமிழைத்துவிட்டது: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் நாட்டின் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்க பூர்வமான எந்த முன்மொழிவும் எமது கூட்டமைப்பால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை. வட மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை ஆகியன முன்வைத்தன. ஆனால் வடமாகாணசபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவைக் கூட வலியுறுத்த எமது தலைவர்களுக்குத் திராணி இருக்கவில்லை போன்றே தோன்றுகின்றது அல்லது...
Loading posts...

All posts loaded

No more posts